இந்தியா முழுவதும் 622 பொருள்களுக்கு புவிசார் குறியீடு தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 12- பிரசித்திப் பெற்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சார்பில் வெளியான புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யக் கூடிய மற்றும் கைவினை கலைஞர் களால் வடிவம் பெறக்கூடிய பிரசித் திப் பெற்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படுகிறது.

புவிசார் குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த பொருட்களின் நம்பகத் தன்மை பாதுகாக்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் மற்றும் கைவினை கலைஞர்கள் ஊக்கு விக்கப்படுவதோடு, நம்முடைய பாரம்பரியமும் பாதுகாக்கும் ஒரு நிலையும் ஏற்படுகிறது. இவையெல்லாம் தனிப்பட்ட அந்தஸ்து, தேவை என்று சொல் லப்பட்டாலும், உலகளாவிய ஏற்றுமதியையும் இந்த புவிசார் குறியீடு மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது.அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 622 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சார்பில் வெளியான புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

இதில் மாநிலங்கள் தனியாக 605 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று இருப்பதாகவும், 2 அல்லது 3 மாநிலங்கள் சேர்ந்து 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த பட்டியலில் 79 பொருட்க ளுக்கு புவிசார் குறியீடு பெற்று உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கடுத்தபடியாக தமிழ்நாடு 69 பொருட்களுக்கான புவிசார் குறியீடை பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது.
அதற்கடுத்த பட்டியலில் முறையே மராட்டியம் (49), கருநா டகா (46), கேரளா (35), அசாம் (31), குஜராத் (27), மேற்கு வங் காளம் (27), ஒடிசா (26), உத்தராகண்ட் (26) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *