அழிந்துபோன உயிரினத்தை மீண்டும் உயிரோடு மண்ணிற்கு கொண்டுவந்த அறிவியல்

Viduthalai
3 Min Read

மனிதன் வானத்தைப் பார்த்து நிமிர்ந்து வளர்ந்து கொண்டு இருந்த காலத்தில் முதல் முறையாக மனிதரோடு தொடர்பில் இருந்த நாய்களின் மூதாதையர்களான டையர் ரக ஓநாய்களை மீண்டும் படைத்து அறிவியலறிஞர்கள் சாதித்துள்ளனர்.
மனிதர்களின் துவக்க காலத்தில் அவர்கள் மீதம் வைத்த இறைச்சிகளை உண்டு அவர்களோடே பயணித்த ஓநாய் இனங்கள் பின்னாளில் நாய்களாக உருவெடுத்தது.
இந்த நிலையில் நாய்களுக்கு ஓநாய்களுக்கு இடையே மரபணு மாற்றம் ஏற்பட்டு இரண்டு பிரிவாக பிரிந்தது,
ஓநாய்களில் 170க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தது. இந்த நிலையில் பல இனங்கள் காலப்போக்கில் அழிந்துபோனது, அதில் டையர் இன ஓநாய் சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோனது இதை மீண்டும் உயிர்கொடுத்துள்ளனர் நார்வே நாட்டு உயிரியல் ஆய்வாளர்கள்.

ஞாயிறு மலர்

வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000- 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், CRISPR மரபணு எடிட்டிங் மற்றும் குளோனிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.
கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகில் அழிந்து போன உயிரினம் ஒன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் மற்ற அழிந்துபோன உயிரினங்களையும் கூட நாம் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக ஆய்வாளர் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்ததுள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழைமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏவை ஆய்வாளர்கள் பிரித்து எடுத்துள்ளனர்.
இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த மரபணு சிதையாமல் பத்திரமாக இருந்துள்ளது. இதனால் அந்த டிஎன்ஏவை எடுத்து ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
தற்போது டிஎன்ஏ ஆய்வுகள் பல மடங்கு மேம்பட்டுவிட்ட நிலையில், இதன் மூலம் 70 மடங்கு அதிகமான மரபணு தொகுப்புகளை ஆய்வாளர்களால் உருவாக்க முடிந்துள்ளது. மரபணுவின் 12.8 மடங்கு உருப்பெருக்கி தனித்தொகுதியாக ஆய்வாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

ஞாயிறு மலர்

டையர் ஓநாய்கள் தங்கள் டிஎன்ஏவில் 99.5% சாம்பல் ஓநாய்களுடன் பகிர்ந்து கொண்டது தெரிய வந்தது. இருப்பினும், 5.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அது பரிணாம ரீதியாக வேறுபட்டுவிட்டதும் தெரிய வந்தது.
பிறகு டையர் ஓநாய் டிஎன்ஏவை சாம்பல் நிற ஓநாய்களுடன் ஒப்பிடுவதன் மூலம் அதன் தசை அமைப்பு மற்றும் வெள்ளை நிற தோல் என அதன் தனித்துவங்களை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். 14 மரபணுக்களில் 20 முக்கியமான மரபணு மாறுபாடுகளை அடையாளம் கண்டனர். உதாரணமாக LCORL மரபணு டையர் ஓநாய்களின் பெரிய உடலுக்குக் காரணமாக இருந்துள்ளது. இதுபோல பல முக்கிய மரபணுக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஞாயிறு மலர்

மேலும், சாம்பல் ஓநாய் ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர். இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் பெண் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன. பிறகு அந்தக்கருக்கள் வளர்ச்சி அடைந்த நிலையில் அது பெண் நாய்களின் கர்பப்பைக்கு மாற்றப்பட்டன.
அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை பெற்றெடுத்துள்ளது.
இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை கற்பனையில் மற்றும் நாவல்களில் மட்டுமே கதாப்பாத்திரமாக சில திரைப்படங்களில் காட்சிகளாக வெள்ளித்திரையில் கொண்டுவரப்பட்ட உயிரினங்களை தற்போது மீண்டும் உயிரோடு மண்ணில் கொண்டுவந்துள்ளனர்.
ஏற்கெனவே 2500 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பணி யானைகளாக மம்மூத் யானைகளை உயிரோடு கொண்டுவரும் முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கும் போது தற்போது அதன் ஒரு வெற்றியாக ஓநாய்களை உருவாக்கி உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *