திராவிட மாடலின் நீண்ட பயணம் ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை!

Viduthalai
4 Min Read

வரலாறு சொல்லும் பாடம் இந்தியத் தீபகற்பம் முழுமையையும் கீழக்கடைசியில் பர்மாவரை மவுரியப் பேரரசர்கள் ஆண்டார்கள். ஆனால், வேங்கடத்திற்கு தெற்கே அவர்களால் வரமுடியவில்லை. அதன் பிறகு இன்று பரபரப்பாக பேசப்படும் அவுரங்கசீப்பும் ஆண்டார். அவராலும் தமிழ்கூறும் நல்லுலகை பிடிக்கமுடியாமல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் பார்ப்பனக் கூட்டம் தலைதூக்கி தமிழ்நாட்டை தங்களின் காவிக்கொள்கைக்கு காவு கொடுக்கப் பார்த்தது.
பணக்காரரான நடேசன் முதலியார், மருத்துவம் படித்துவிட்டு, பயிற்சி (பிராக்டிஸ்) பண்ணலாம்னு வந்தால் கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல் என்று எல்லா இடங்களிலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செய்ததை சகிக்க முடியாமல், நம்ம பசங்களையும் படிக்க வைப்போம் என்று, எல்லோரும் வாங்க, படிங்கன்னு விடுதியை கட்டி, பிறகு பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் சங்கம் என்று உருவாக்கினார்.

அதை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று மாற்றி, டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில் அவமானப்பட்ட பணக்காரர் தியாகராயரையும் சேர்த்துக்கொண்டு Justice partyஅய் தொடங்கி அதை நீதிக்கட்சியாக மாற்றி, ஜாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுதும் நம்ம மக்களோட எதிர்காலம் முக்கியம் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கே சென்று ஜாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேண்டும் என்று கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு..
மான்டேக் – செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஅய் பயன்படுத்தி தேர்தலில் நின்று ஆட்சியை பிடித்து, 19,000 ஆரம்ப பள்ளிகளை திறந்து, மதிய உணவு வழங்கி, எல்லோரையும் படிக்க வைத்து, அரசு வேலை வழங்கி, கல்லூரிகளில் தமிழை பாடமாக வைத்து, சமஸ்கிருதத்தை நீக்கி, நிறைய மாணவர்களை மருத்துவம் படிக்க வைத்து, அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கி நமது பிள்ளைகளை படிக்க வைத்தனர்.
கோவில்களில் நடந்த அக்கிரமங்களையும், கோவில் சொத்துகளை திருடியதையும் தடுக்க இந்து அறநிலையத் துறையை ஆரம்பித்து, மக்களை திருத்த சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து, ஊர் ஊராக சென்று செருப்பு, சாணி, மலத்தால் அடி வாங்கி, தேவதாசி முறையை ஒழித்து, பறையர்களையும், நாடார்களையும் வைக்கம் சிவன் கோவில் வீதிக்குள் விடமாட்டோம் என்று சொன்ன, தன் குடும்ப நண்பர் திருவிதாங்கூர் மஹாராஜாவை எதிர்த்து சிறைக்கு சென்று, பறையர்களையும், நாடார்களையும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ள கூட்டிக் கொண்டு சென்றதால் சிறை சென்று, தனித் தமிழ்நாடு கேட்டு லாகூர்லேர்ந்து இங்கிலாந்து செல்லும் பொழுது விமான விபத்தில் தளபதி பன்னீர்செல்வத்தை இழந்து, நீதிக்கட்சி காலத்தில் ஆரம்பித்த பள்ளிகளில் 3,000 பள்ளிகளை மூடி, ஹிந்தியைத் திணித்த தனது நண்பரான ராஜகோபால் என்ற ராஜாஜியை எதிர்த்து 2 ஆண்டு சிறையில் இருந்து, நீதிக்கட்சியை திராவிட கழகமாக மாற்றி, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தனர்.

குலக்கல்வி என்ற பெயரில் 6,000 பள்ளிகளை மூடிய தனது நண்பரான ராஜகோபால் என்ற ராஜாஜியை பதவியை விட்டு ஓடவிட்டு, காமராஜரை முதலமைச்சராக்கி, ராஜாஜி மூடிய பள்ளிகளை திறக்க வைத்து, எல்லா பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கி, எல்லா தரப்பு பிள்ளைகளையும் படிக்க வைத்து, அரசு வேலைக்கு அனுப்பி, 1957இல் தேர்தலில் போட்டியிட்டு, 15 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று, 1959இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 49 கவுன்சிலர்களை வெற்றிபெற செய்து, சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, 1962இல் 50 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றனர்.

1965இல் ஹிந்தியை எதிர்த்த 1,000 இளைஞர்களை துப்பாக்கிகளுக்கு பலிகொடுத்து, 1967இல் ஆட்சியை பிடித்து, தமிழ்நாடு பெயர், இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமண சட்டம், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உட்பட, திராவிட கொள்கைளை சட்டமாக உருவாக்கி, 1971இல் “183” சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்து, நிலச் சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியது உட்பட பல மக்கள் நலத்திட்டங்களை வழங்கி, ஒன்றியத்தின் எமர்ஜென்சியை எதிர்த்து, ஆட்சியை பறிகொடுத்து, RSS, எம்.ஜி.ஆரை வைத்து கட்சியை உடைத்த பொழுதும் கட்சியை காப்பாற்றி, 1989இல் மீண்டும் ஆட்சியை பிடித்து, LTTE உதவியுடன் ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி ஆகியோரால் மீண்டும் ஆட்சியை பறிகொடுத்து, வைகோ கட்சியை உடைத்த பொழுதும், கட்சியை காப்பாற்றி 1996இல் மீண்டும் ஆட்சியை பிடித்து பல மக்கள் நலத்திட்டங்களை வழங்கப்பட்டது.

2006இல் இதனை தடுக்க மீண்டும் RSS, விஜயகாந்தை வைத்து 10% வாக்குகளை பிரித்த பொழுதும் மீண்டும் ஆட்சியை பிடித்து, காங்கிரசுக்கு பங்கு கொடுக்காமல், 5 ஆண்டுகளும் ஆட்சி செய்து பல தொழில் வளர்ச்சிகளை உருவாக்கி, எந்த ஈழத்துக்காக உழைத்தோமோ, அந்த இயக்கத்தாலேயே கொலைப்பழி சுமந்து ஆட்சியை இழந்து,மக்கள் நலக் கூட்டணி சதியால் 2016இல் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்து, 2018இல் தலைவரை இழந்த பொழுதும் கட்சியை கட்டுக் கோப்பாக வைத்து, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து 39/40 மக்களவைத் தொகுதிகளில் வென்று, 2021இல் ஆட்சியை பிடித்து, ஸநாதன பேயாக ஆட்டம் போட்ட பாஜகவை எதிர்க்க இந்தியா கூட்டணியை உருவாக்கி, இந்திய ஒன்றியத்துக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்து, “திமுக” நினைப்பிலேயே புலம்ப வைத்தோமே, இதுதான் அரசியல்.! திராவிட சித்தாந்தத்தை வடக்கிலும் பரவ விட்டு ஒன்றிய அலுவலகத்தின் உள்ளேயே குச்சியை விட்டு ஆட்டுறோமே.. “இதுதான் திராவிட அரசியல்.!”
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *