குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்

viduthalai
2 Min Read

அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை, ஏப்.11- குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானியக்கோரிக்கையின் போது துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் கடன் உத்தரவா தத்துடன் ரூ.100 கோடி அள வில் பழங்குடியினருக்கு, தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

கிராம அளவிலான கைவினை குழுக்கள் மற்றும் குறுந்தொழில் குழுமங்கள் மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை பாதுகாத்திடும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.18.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியத்தின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

வணிகக் குறியீடு

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் ஐந்து தனித்துவமான தயாரிப்புக ளுக்கு பொதுவான வணிகக் குறியீடுகள் ரூ.3.62 கோடியில் உருவாக்கப் படும்.

இழப்பீடு

விபத்து மற்றும் பாம்பு கடியினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க ஏதுவாக ரூ.1.50 கோடி மதிப்பில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.

தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை, உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் ஆர்வலர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தொழில்நுட்ப பரிமாற்றம், பயிற்சி, மானியங்கள் ஆகியவற்றை ஒருங்கி ணைத்து ரூ.5கோடி மதிப்பில் ஒரு திட்டம் உருவாக்கப் படும்.

தென்னை நார் உற்பத்தியில், மதிப்பு கூட்டலை ஊக்கு விக்கும் விதத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மேம்பாட்டு மய்யம் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் சார்ந்த பொருட்களுக்கு சந்தை அங்கீகாரம் பெற தனித்துவமான வணிகக் குறியீடு உருவாக்கப்படும்.

இளைஞர்களுக்கு பயிற்சி

மின்னணு வர்த்தக தளங்களில், கைவினை கலைஞர்கள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை, பதிவேற்றம் செய்து அவர்களது உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு வசதி செய்து தரப்படும்.

டெல்டா மாவட்டங் களைச் சேர்ந்த 120 இளைஞர்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனையை ஊக்குவிக்க, 2 ஆயிரம் உயர் கல்வி நிறுவனங்களில் ரூ.19 கோடி மதிப்பீட்டில்‘நிமிர்ந்து நில்’ என்கிற பெயரில் செயல்படுத்தபடும்.

விண்வெளித் தொழில் நுட்பம், கடல்சார் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தகுந்த ஆதரவு வழங்கும் விதமாக தூத்துக்குடியில் புதிய வட்டார புத்தொழில் மய்யம் அமைக்கப்படும்.

இவ்வாறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *