பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைத் தோலுரித்து கும்மிடிப்பூண்டியில் கழக விளக்கக் கூட்டம்

1 Min Read

கும்மிடிப்பூண்டி, ஏப். 11- கும்மிடிப்பூண்டி கழக மாவட்டத்தில் பொதுக்குழு  தீர்மானம் விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினை பாராட்டியும்,கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்தும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சென்னையை அடுத்த காரனோடையில் 27.3.2025 அன்று கும்மிடிப்பூண்டி கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்ரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினரும், சோழவரம் ஒன்றிய கழக தலைவருமான ந. கஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடக்கவுரை ஆற்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி. பன்னீர்செல்வம் பேசும்போது, சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், அதே போல வடசென்னை, தென்சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களில் நடைபெற்று வரும் இளைஞரணியின் தொடர் தெருமுனை கூட்டங்களுக்கு தமது வாழ்த்தினையும் தெரிவித்தார், அடுத்து உரையாற்றிய மாநில இளைஞரணி துணை செயலாளர்  சோ.சுரேஷ் பாஜகவின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

இறுதியாக கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் சிறப்புரை ஆற்றினார்,அவர் பேசும்போது சமூகநீதி காத்த சரித்திர நாயகர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டியும், பல்வேறு இயக்க செய்திகளை மக்கள் விரும்பும்படியும் பேசினார்.அவரின் பேச்சைக் கேட்டு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

கூட்டத்தில் பங்கேற்றோர்

மாவட்ட தலைவர் புழல். த. ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஜெ. பாஸ்கரன், பொன்னேரி நகர தலைவர், வே.அருள், கும்முடிப்பூண்டி ரமேஷ், புழல் ஒன்றிய செயலாளர், ப. க. மாவட்ட தலைவர் ஓவியர் ஜனாதிபதி, புழல் ஒன்றிய தலைவர் ஜெகத் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் க.ச.க இரனியன், புழல் நகர தலைவர் சோமு, பொன்னேரி வினோத், புதுவாயல் இரனியன், பாலவாயல் பிரவீன், மீஞ்சூர் வெங்கடாச்சலம், மீஞ்சூர் பழனி மற்றும பல கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட கழக இளைஞரணியின் செயலாளர் பெரியபாளையம் அ.ஆகாஷ் நன்றி கூறிட கூட்டம் இனிதே முடிந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *