தாம்பரம், ஏப். 11- 2.4.2025 புதன்கிழமை அன்று மாலை தாம்பரம் பெரியார் வாசகர் வட்ட 16ஆவது சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
பெரியார் வாசகர் வட்டத் தலைவரும் தி.மு.கழக தலைமை செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆதிமாறன் தலைமையில்.தாம்பரம் மாவட்ட திராவிட கழக தலைவர் ப.முத்தையன் வரவேற்பில். தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் ஒருங்கிணைப்பில். சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரி துணை பேராசிரியர் முனைவர் தீபிகா சிந்து சமவெளி நாகரிகம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஆரிய நாகரிகம் அல்ல திராவிட நாகரிகம் தான்
தம் உரையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மைகளையும் வரலாற்று சுவடுகளையும் அதற்கான ஆதாரங்களையும் மிக நேர்த்தியாக “பவர் பாயிண்ட்” என்னும் தொழில் முறையில் ப்ரொஜெக்டர் மூலமாக வருகை தந்த மக்களுக்கு மிக விளக்கமாக காட்சிப்படுத்தி எடுத்துரைத்து சிந்து சமவெளி நாகரிகம் என்பது ஆரிய நாகரிகம் அல்ல திராவிட நாகரிகம் தான்.
அந்த நாகரிகத்தின் தொன் மைகள் கீழடி என்னும் பகுதியில் அதனுடைய எச்சங்கள் எல்லாம் மிகச் சிறப்பாக அழியாமல் இருப்பதை நாம் மக்களை அழைத்துச் சென்று மக்களுக்கு அந்த அரிய வரலாறுகளை எல்லாம் எடுத்துரைத்து விளக்கினார்.
தற்போதைய அரசு தற்போதைய வரலாற்று எச்சங்களை பாதுகாத்து வருவதையும் தம் உரையிலேயே குறிப்பிட்டு கூறினார்.
மக்கள் வரலாற்றைப் படித்து தான் தொல்லியல் காலம் என்பது அந்த கால கற்கருவிகள், பானைகள், கட்டடங்கள் மற்றும் மனிதன் விட்டு சென்ற எச்சங்களின் மூலம் அறிந்து கொள்வது தான் தொல்லியல்.மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இன்றைய மனித கால வரை காலங்களாக பிரித்து கால வரிசைப்படி மனிதன் வளர்ச்சியே தொல்லியல் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான ஒன்று தொல்லியல் மிக முக்கியமான செய்தி எழுத்துக்கள் இல்லாத காலத்தை குறிப்பது தொல்லியல் காலம்.
எழுத்துக்கள் வரத் தொடங்கிய பிற்காலம் வரலாற்றுக் காலம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்திய காலம் என்பதற்காக காட்சிகள் வழியாக காட்சிப்படுத்தி மக்களுக்கு மிக விளக்கமாக பல காட்சியை காண்பித்து கற்கால கருவிகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். வித விதமான கருவிகளைக் கொண்டு காலங்களை கண்டுபிடித்தனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்த மாதிரி பல காலங்கள் கடந்து இன்று நாம் நாகரிகமான மனிதனாக வாழ்ந்து வருகிறோம். இப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தான் மனிதன். இதுவே நம்முடைய சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாற்று சான்றுகள் என்று உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக தாம்பரம் நகர கழகத் தலைவர் சீ.லட்சுமிபதி கூறினார்.