எந்தப் பாலத்தைத் ‘தரிசித்தார்’ மோடிஜி?

1 Min Read

ராமநவமி நாளான்று, இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை ெஹலிகாப்டரில் இருந்து தரிசித்தேன்.
அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில், தற்செயலாக ராமர் பாலத்தை தரிசித்தேன் என்றார் பிரதமர் நரேந்திர மோடி!

கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை என்று 2022 ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஒன்றிய அமைச்சரோ, ராமர் பாலம் என்ற ஒன்று இல்லை என்கிறார்.
பிரதமரோ, ராமர் பாலத்தைத் தரிசித்தேன் என்கிறார்.
எது உண்மை?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *