‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

2 Min Read

சென்னை, ஏப். 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது

9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம்

2024-2025-ஆம் ஆண்டில் தமிழ் நாடு 9.69 சதவீதம் உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும். 2011-2012-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பின்படி 2023-2024-ஆம் ஆண்டில் ரூ.15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த தமிழ் நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-2025-ஆம் ஆண்டில் ரூ.17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது என ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித் துள்ளது. இதற்குமுன், 2017-2018-ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59 சதவீதம் இருந்தது. 2020-2021-ஆம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சமாக 0.07 சதவீதம் என பதிவாகியது. இந்த காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் வளர்ச்சி இறங்கு முகமாக இருந்தன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது. பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் எனப்படுகிறது. பணவீக் கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே இயல்பான வளர்ச்சி வீதம் ஆகும்.

இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

2024-2025-ஆம் ஆண்டு தமிழ் நாடு, 14.02 சதவீதம் இயல்பான வளர்ச்சி வீதத்தினை பெற்று இன்று இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதல் மாநிலமாக திகழ்கிறது.
இந்தியாவிலேயே முதலிடமாக தமிழ்நாடு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-இல் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி, நிறை வேற்றிவரும் திட்டங்களே காரணமாகும்.பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயண திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 தரும் தமிழ்ப் புதல்வன் திட்டம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 தரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,
அய்.நா. அமைப்பு பாராட்டிய மக்களைத் தேடி மருத்துவ திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், ஏழை, எளியோர் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம், நான் முதல்வன் திட்டம், ஊட்டச்சத்தை உறுதிசெய்திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயோத்திதாசர் குடியி ருப்பு மேம்பாட்டு திட்டம் முதல்வரின் முகவரி திட்டம், 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் குவிந்த ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி முதலீடுகள் வாயிலாக பெருகும் 32 லட்சத்து 4 ஆயிரத்து 895 வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களே இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் மற்றும் புதிய உச்சம் எனும் வெற்றிக்கு அடித்தளங்கள் ஆகும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *