சிறுமிகளின் நேர்மை தங்கக் காப்பை காவல் மய்யத்தில் ஒப்படைத்த சிறுமிகள்

1 Min Read

திருத்தணி, ஏப்.9- திருத்தணியில் கீழே கிடந்த தங்கக் காப்பை புறக்காவல் மய்யத்தில் ஒப்படைத்தனர் சகோதரிகள்.

திருத்தணி முருகன் கோயிலில் கீழே கிடந்த 2.5 பவுன் தங்கக் காப்பை மீட்டு புறக்காவல் மய்யத்தில் சகோதரிகள் ஒப்படைத்தனா். சென்னை, பெரம்பூா் ஜவகா் நகரைச் சோ்ந்தவா் சாய் முருகன் மகன் கவுதம் (33). அய்டி நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா் 7.4.2025 அன்று தனது மனைவியுடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று பிறகு படிகள் வழியாக இறங்கிய போது, கையில் போட்டிருந்த 2.5 பவுன் தங்கக் காப்பு மாயமானது தெரிய வந்தது.

இதற்குள் கோயிலுக்கு தனது பெற்றோருடன் வந்த சிறுமிகள் (அக்கா, தங்கை) பவித்ரா(12), ரேணுகா(7) ஆகியோர் கீழே இருந்த தங்கக் காப்பை மீட்டு மலைக்கோயிலில் உள்ள புறக்காவல் மய்யத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து காவல் துறையினர் தங்கக் காப்பை தவற விட்ட, கவுதமிடம் காப்பை ஒப்படைத்தார். தங்கக் காப்பை மீட்டு கொடுத்த சிறுமிகளுக்கு கவுதம் அவரது மனைவி நன்றி கூறினா். நகையை மீட்டு கொடுத்த சகோதரிகளை காவலர்கள் பாராட்டினா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *