இலங்கை மீனவர்கள் 2 பேர் தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.7- மனிதாபிமானக் கோணத்திலும், இருநாட்டு நல்லுறவுகளையும் கருத்தில் கொண்டும், கடந்த 20.03.2025 அன்று கடலோர காவற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை நாட் டைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் 1DAY 0035 TCO என்ற பதிவெண் கொண்ட படகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு விரைவாகவும் தேவையான அனைத்து நடை முறைகளையும் பின்பற்றி நேற்று முன்தினம் (04.04.2025) விடுவித்துள்ளது.
இது, கடலோர பிரச்சினைகளுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் மனிதாபிமான பார்வையுடன் அணுகும் என்ற உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல் லிணக்கத்தை வலுப் படுத்துவதோடு, கடலோரங்களில் வாழும் மீனவர்களின் உரிமை கள் மற்றும் நலன்களை பாது காக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டையும் வெளிப் படுத்துகின்றன. நம்பிக்கையும், புரிதலும், ஒருவருக்கொருவர் மதிப்பும் கொண்ட உறவுகளை கட்டி யெழுப்புவதே தமிழ்நாடு அரசின் நிலையான நோக்கமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *