சொத்து வரி சென்னை மாநகராட்சி முக்கிய தகவல்

1 Min Read

சென்னை, ஏப். 7- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித் திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியானது, பிரதான வருவாய் ஆகும்.

இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த்தடுப்புப் பணி போன்ற அத்தியா வசியப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 84(1)இன்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 30 தினங்களுக்குள் சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, நிகர சொத்துவரியில் 5 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.5000/- ஊக்கத் தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2025-2026ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு (1/2025-26) தொடங்கியுள்ளதால், சொத்து உரிமையாளர்கள் தங்களது அரையாண்டு சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பயனைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *