மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி அவர்களுக்கு வாழ்த்துகள்

1 Min Read

மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தோழர் எம்.ஏ. பேபி (கேரளா) தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கிறார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகள்.
தோழர் எம்.ஏ. பேபி அவர்கள் கேரள அரசில் கல்வி அமைச்சராக இருந்து அரசியல் ஆளுமையும், அனுபவமும் உடையவர். மாணவப் பருவம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து பணியாற்றி வருபவர்.
புதிய பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
85 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு – முடிவுகளை மேற் கொள்ளும் அமைப்பு – அதில் தமிழ்நாட்டிலிருந்தும் தலைமைக் குழுவுக்கு தோழர்கள் பெ. சண்முகம், கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத், கே.பாலபாரதி, என். குணசேகரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் வாழ்த்துகள்.
நாடு முக்கிய இலக்குடன் மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவத்திற்குப் போராடும் ஒரு முக்கிய கால கட்டத்தில் இத்தேர்வுகள் அதற்குப் பெரிதும் உதவிடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
7.4.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *