பிரதமர் அவர்களே,
நீங்கள் பாம்பன் மேடையில் பேசும் போது தமிழ்நாட்டில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறார்கள் –
இங்கே தமிழ் தமிழ் என்று நடிக் கிறார்கள் என்று நையாண்டி செய்திருந்தீர்கள்.
எதையுமே தினமலர் போன்றே கற்பனையோடு சான்றுகள் இல்லாமல் வாயில் என்ன வருகிறதோ அதை அப்படியே பேசிவிட்டுச் செல்வதில் மோடிக்கு இணை மோடிதான்.
மதராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றியவர் முதலமைச்சர் அண்ணா. இன்றும் தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாழ்கதமிழ் என்று மின்னுகிறது.
தனித்தமிழ் இயக்கம் உருவானது நீதிகட்சி ஆட்சியில், தமிழில் கையொப்ப மிட உத்தரவிட்டது திராவிட மாடல் ஆட்சியில், முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் மு.க. ஸ்டாலின் போன்றோர் தமிழில் கையொப்பமிட்டே வந்துள்ளனர்.
தமிழில் கையொப்பம் புரியாமல் பேசும் பிரதமர் மோடி

Leave a Comment