குருந்தன்கோடு, ஏப். 7- குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல் நகர கழக தோழாகள் கலந்துரையாடல் கூட்டம் நெய்யூரில் நடைபெற்றது. கழக தோழர் நெய்யூர் தா.ஜெபராஜ் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரணியல் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவு ரையாற்றினார். குருந்தன்கோடு ஒன்றிய கழக செயலாளர் ஆ.சிவகுமார், பகுத்தறி வாளர்கழக மாவட்ட செயலாளர் எம். பெரியார் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், கழக வளர்ச்சிப்பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.தோழர்கள் கலைப்பிரியன், இஸ்மாயில் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசை கண்டிப்பது
தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமயமாக்க ஓயாது உழைக்கும் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துகளை பரப்பிவரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது, கழக பொதுக்கூட்டங்கள் நெய்யூர், திங்கள்நகர், கடியப்பட்டணம் பகுதியில் நடத்துவது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துவது, தமிழ்நாட்டு அரசுக்கு கொடுக்கவேண்டிய நிதியை கொடுக்க மறுக்கும், இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பது, திங்கள்நகர், இரணியல், நெய்யூர் பகுதியில் மின்விளக்குகளை சரியாக இயங்க வைக்கவும், பேரூராட்சி சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் அந்தந்த பேரூராட்சி செயல்அலுவலர்களைக் கேட்டுக்கொள்வது, நாகர்கோவில் -திங்கள் நகர்-கருங்கல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தோழர்கள் த.ஜெகதீஸ்வரி, ஜெ.ஜெபிஷா, சங்கீதா,ராஜகோபால், பெரியார் பிஞ்சுகள் ஜெ.தீபிகா, சிறீ கரீஸ்,பவித்திரா,ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குமரிமாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளராக ஜெ.ஜெபிஷா தேர்வு செய்யப்பட்டார்.