நவிமும்பை இளைஞர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் சந்தீப் பகத், நிசாந்த் பகத் ஆகியோரைச் சந்தித்து, பெரியாரின் ஹிந்தி நூல்கள் மற்றும் OBC VOICE மாத இதழ்களையும், மும்பை மாநிலத் திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா வழங்கினார். அதேபோல மராட்டிய மாநிலம் “சைபர் கிரைம்” காவல்துறை அதிகாரி சந்திப் அவர்களைச் சந்தித்தும் பெரியார் நூல்களை வழங்கினார். இதை ஒரு தொடர் பணியாகவே இவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.