அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல் : இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.6 ‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா வுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா்’ என மக்கள வையில் ஒன்றிய அரசு தெரிவித்தது.

அமெரிக்காவில் இருந்து இந் தியா்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரம், அங்குள்ள ஹிந்து கோயில்களை பாதுகாக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கனடா-இந்தியா தூதரக உறவுகள் குறித்து மக்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்து வெளியுறவு இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா வுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா். அவா்களை எல்லையிலேயே கைது செய்யப்பட்டு பல்வேறு சோதனை களுக்கு பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனா். அதேபோல் முறையான ஆவணங்களின்றி வசிக்கும் நபா்களை கண்டறிந்து அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதற்கு முன் அவா்கள் குறித்த தகவல்களை முதலில் இந்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனா். அவா்கள் இந்திய குடிமகன்கள் என உறுதிப்படுத்தப்பட்டபிறகே இந் தியாவுக்கு நாடுகடத்தப்படுகின்றனா் இருப்பினும், அமெரிக்காவுக்கு மாணவா்கள், தொழில்ரீதியாக பயணிப்போர், சுற்றுலா செல்வோர் தங்குதடையின்றி பயணிக்கும் வகையில் அந்நாட்டுடன் இந்தியா இணைந்து செயல்படும்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத மாக நுழைந்த இந்தியா்கள் தொடா்பான தரவுகள் ஏதும் ஒன்றிய அரசிடம் இல்லை. இதுகுறித்த தகவல்களை அமெரிக்காவே வழங்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *