2024–2025 நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரிப்பு

1 Min Read

புதுடில்லி, ஏப்.4 கடந்த 2024-2025 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரம் மாதந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலைவிட 9.9 விழுக்காடு அதிகம். ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலில் ஒன்றிய ஜிஎஸ்டியாக ரூ.38,100 கோடி, மாநில ஜிஎஸ்டியாக ரூ.49,900 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 95,900 கோடி மற்றும் ஜிஎஸ்டி செஸ் ரூ.12,300 கோடி வசூலாகி உள்ளது.
இதன்மூலம் கடந்த 2024-2025 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.

இதில் ரீபண்ட் தொகை போக நிகர ஜிஎஸ்டியாக ரூ.19.56 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் வசூலைவிட 8.6 விழுக்காடு அதிகம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9.1 விழுக்காடு உயர்ந்து ரூ.1,84 லட்சம் கோடியாகவும், ஜனவரியில் 12.3 விழக்காடு அதிகரித்து ரூ.1.96 லட்சம் கோடியாகவும் இருந்தது. இதன்மூலம் 2024-2025 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ஜிஎஸ்டி வசூல் 10.4 விழுக்காடு அதிகரித்து ரூ.5.8 லட்சம் கோடியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *