சொத்து விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

1 Min Read

புதுடில்லி, ஏப்.4 உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பவர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் நீதிபதிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுந்தால் அப்போதும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். தலைமை நீதிபதியும் தனது சொத்து விவரத்தை வெளியிட வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது சமீபத்தில் தெரியவந்தது. இந்நிலையில்தான் நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *