கிராமப்புற பிரச்சாரம் – தெருமுனைக் கூட்டங்கள் நடத்த முடிவு

viduthalai
1 Min Read

திண்டிவனம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

திண்டிவனம், ஏப். 4- தந்தை பெரியார் படிப்பகத்தில் 29.3.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் இர. அன்பழகன் தலைமையில் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் தா.இளம்பரிதி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன்,மாவட்ட காப்பாளர் செ. பரந்தாமன், பக மாவட்ட தலைவர் மு. இராதா, பக மாவட்ட செயலாளர் நவா. ஏழுமலை, மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பெருமாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இயக்க செயல் திட்டங்கள் குறித்தும்,எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்தும், புதிய கிளைகழங்கள், கழக தோழர்கள் சந்திப்பு, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான பொருளாதாரச் சமாளிப்பு மாவட்ட தலைவர், செயலா ளர்கள் எப்படி கழக தோழர் களிடம் நடந்து கொள்ள வேண்டும், என்பதைப்பற்றி எல்லாம் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பா. வில்லவன்கோதை, நகர செயலாளர் சு. பன்னீர் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் மு. இரமேஷ்,நகர இ. தலைவர் கே. பாபு, மரக்காணம் ஒன்றிய மானூர் கிளை கழக பொறுப்பாளர் பா. செந்தில், மாணவர் கழகச் செயலாளர் பெ. திருமாவளவன்,பொதுக்குழு உறுப்பினர் தா.விஜயலட்சுமி தாஸ், மகளிரணி தோழியர் இ.நிவேதா, பெ.சாந்தி,பெரியார் பற்றாளர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன் நன்றி யுரையாற்றினார்.

சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவது..

தெருமுனைக்கூட்டம், கிராமப்புற பிரச்சாரம், பெரியார் பேசுகிறார் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது, கழக துண்டறிக்கைகளை பொதுமக்களி டம் வழங்குதல், இளைஞரணியை வலுப்படுத் துதல் மற்றும் புதிய கிளைக் கழகம் உருவாக்குதல், பெரியார் உலகம், விடுதலை, உண்மை சந்தா சேர்ந்தல்.
ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *