ஆஸ்திரேலியாவிலிருந்து கொள்கைப் பிரச்சாரம் செய்து திரும்பிய, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தனது 65ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அத்துடன் பெரியார் உலகம் நிதி ரூபாய் 2,000/- வழங்கினார். உடன் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தோழர்கள் நாத்திகன், மோகன்ராஜ், கருப்பையா, சா.தாமோதரன், தனசேகரன், உத்ரா, தமிழ்ச்செல்வன் (2.4.2025, சென்னை பெரியார் திடல்)