மகா போதி நிர்வாகக் குழுவில் இந்துக்களை நியமிப்பதா?

Viduthalai
2 Min Read

பீகாரில் பவுத்தர்கள் தீவிர போராட்டம்

புதுடில்லி, ஏப். 3 பீகார் மாநிலம் புத்த கயா​வில் அமைந்​துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்​குள் உள்​ளது. இக்​கோ​யிலை நிர்​வகிக்க, மகா போதி கோயில் சட்​டம் 1949 (பிஜிடிஏ) அய் பீகார் மாநில அரசு இயற்​றியது. இச்​சட்​டத்​தின்​படி, மகா போதி கோயிலின் நிர்​வாகக் குழு​வில் பவுத்​தர்​கள் மற்​றும் இந்​துக்​கள் தலா 4 பேரை பீகார் அரசு நியமிக்​கிறது.
இக்​குழு​வின் நிரந்தரத் தலை​வ​ராக புத்த கயா மாவட்ட ஆட்​சி​யர் இருப்​பார். இந்​நிலை​யில், கோயில் நிர்வாகக் குழு​வில் இந்​துக்​கள் இருக்கக் கூடாது. முழு அதி​கார​மும் தங்க ளுக்கே அளிக்க வேண்​டும் என நீண்ட கால​மாக பவுத்தர்கள் கோரி வரு​கின்றனர்.

பவுத்தர்கள் போராட்டம்!
இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி 2 மாதங்​களாக மீண்​டும் பவுத்​தர்​கள் தீவிர போராட்​டத்​தில் இறங்கி உள்​ளனர். மகா போதி கோயில் அகில இந்​திய பவுத்தர்கள் சங்​கத்​தினர் (ஏஅய்பிஎப்) இப்​போ​ராட்​டத்தை முன்​னின்று நடத்​துகின்​றனர். மகா போதி கோயி​லில் கடந்த பிப்​ர​வரி 27 ஆம் தேதி இரவு வழக்​கம் போல் பவுத்​தம் அல்​லாத அன்​றாட நிகழ்வுகள் தொடங்​கின. இதை எதிர்த்து பவுத்த துறவி​கள் சிலர் கோயில் உள்​ளேயே பட்டினிப் போராட்​டம் தொடங்​கினர். அவர்​களை அங்​கிருந்து வெளி​யேற்ற முயற்சிக்கப்பட்டது.
இதையடுத்து ஏஅய்பிஎப் அமைப்​பினர் போராட்​டத்தை தீவிரப்​படுத்தி வரு​கின்​றனர். மகா போதி கோயி​லின் நிர்​வாகம் 13 ஆம் நூற்​றாண்டு வரை பவுத்​தர்​களின் கைகளில் இருந்​தது. இது துருக்​கிய படையெடுப்​பாளர்​களின் வரு​கைக்​குப் பிறகும், 1590 இல் கயா​வில் மஹந்த் கமாண்டி கிரி என்ற துறவி வரும் வரையிலும், அதன் நிர்​வாகத்​தில் யார் இருந்​தார்​கள் என்​பது தெரிய​வில்​லை.
மஹந்த் கமாண்டி கிரி, மகாபோதி கோயி​லில் புத்த கயா மடால​யத்தை நிறு​வி​னார்.

இந்து மடமா?
அதன் பிறகு அந்த மடால​யம் ஒரு இந்து மடமாக மாறியது. கிரி​யின் சந்​த​தி​யினர் இன்​னும் மகா போதி கோயி​லின் நிர்வாகத்​தில் இடம்​பெற்​றுள்​ளனர். மகா​போதி கோயிலை ஒரு இந்து மதத் தலம் என்று இந்​துக்​கள் அழைக்​கின்​றனர்.
இதற்கு விஷ்ணு​வின் 9 ஆவது அவதா​ர​மாக கவுதம புத்​தரை இந்​துக்​கள் கருது​வது​தான் காரணம். கடந்த 2002 ஆம் ஆண்டு மகா போதி கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்​பரிய தகுதியை வழங்​கியது. மகா போதி கோயிலை பவுத்​தர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என்ற கோரிக்கை 19 ஆம் நூற்​றாண்​டிலேயே தொடங்கி விட்​டது. இந்த இயக்​கம் இலங்கை துறவி அனகாரிக தர்​ம​பால​ரால் தொடங்​கப்​பட்​டது. அப்போது, மகா போதி கோயிலை தங்கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​திருந்த இந்து பூசா​ரி​களுக்கு எதி​ராக அவர் நீதி​மன்​றம் சென்​றார்.
இதையடுத்து 1949 ஆம் ஆண்டு பீகார் பேரவை மகா போதி கோயில் சட்​டம் 1949 அய் இயற்​றியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிய அரசின் வழி​பாட்​டுத் தலங்​கள் பாது​காப்பு சட்​டம் 1991 இன் கீழ் மகா போதி கோயிலும் வரு​கிறது. இதன் காரண​மாக கோயில் நிர்​வாகத்​தி​லும் எந்த மாற்​ற​மும் செய்ய முடியாது. இதை எதிர்த்​தும் 2 பவுத்த துறவி​கள் உச்சநீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *