மகா போதி நிர்வாகக் குழுவில் இந்துக்களை நியமிப்பதா?

2 Min Read

பீகாரில் பவுத்தர்கள் தீவிர போராட்டம்

புதுடில்லி, ஏப். 3 பீகார் மாநிலம் புத்த கயா​வில் அமைந்​துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்​குள் உள்​ளது. இக்​கோ​யிலை நிர்​வகிக்க, மகா போதி கோயில் சட்​டம் 1949 (பிஜிடிஏ) அய் பீகார் மாநில அரசு இயற்​றியது. இச்​சட்​டத்​தின்​படி, மகா போதி கோயிலின் நிர்​வாகக் குழு​வில் பவுத்​தர்​கள் மற்​றும் இந்​துக்​கள் தலா 4 பேரை பீகார் அரசு நியமிக்​கிறது.
இக்​குழு​வின் நிரந்தரத் தலை​வ​ராக புத்த கயா மாவட்ட ஆட்​சி​யர் இருப்​பார். இந்​நிலை​யில், கோயில் நிர்வாகக் குழு​வில் இந்​துக்​கள் இருக்கக் கூடாது. முழு அதி​கார​மும் தங்க ளுக்கே அளிக்க வேண்​டும் என நீண்ட கால​மாக பவுத்தர்கள் கோரி வரு​கின்றனர்.

பவுத்தர்கள் போராட்டம்!
இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி 2 மாதங்​களாக மீண்​டும் பவுத்​தர்​கள் தீவிர போராட்​டத்​தில் இறங்கி உள்​ளனர். மகா போதி கோயில் அகில இந்​திய பவுத்தர்கள் சங்​கத்​தினர் (ஏஅய்பிஎப்) இப்​போ​ராட்​டத்தை முன்​னின்று நடத்​துகின்​றனர். மகா போதி கோயி​லில் கடந்த பிப்​ர​வரி 27 ஆம் தேதி இரவு வழக்​கம் போல் பவுத்​தம் அல்​லாத அன்​றாட நிகழ்வுகள் தொடங்​கின. இதை எதிர்த்து பவுத்த துறவி​கள் சிலர் கோயில் உள்​ளேயே பட்டினிப் போராட்​டம் தொடங்​கினர். அவர்​களை அங்​கிருந்து வெளி​யேற்ற முயற்சிக்கப்பட்டது.
இதையடுத்து ஏஅய்பிஎப் அமைப்​பினர் போராட்​டத்தை தீவிரப்​படுத்தி வரு​கின்​றனர். மகா போதி கோயி​லின் நிர்​வாகம் 13 ஆம் நூற்​றாண்டு வரை பவுத்​தர்​களின் கைகளில் இருந்​தது. இது துருக்​கிய படையெடுப்​பாளர்​களின் வரு​கைக்​குப் பிறகும், 1590 இல் கயா​வில் மஹந்த் கமாண்டி கிரி என்ற துறவி வரும் வரையிலும், அதன் நிர்​வாகத்​தில் யார் இருந்​தார்​கள் என்​பது தெரிய​வில்​லை.
மஹந்த் கமாண்டி கிரி, மகாபோதி கோயி​லில் புத்த கயா மடால​யத்தை நிறு​வி​னார்.

இந்து மடமா?
அதன் பிறகு அந்த மடால​யம் ஒரு இந்து மடமாக மாறியது. கிரி​யின் சந்​த​தி​யினர் இன்​னும் மகா போதி கோயி​லின் நிர்வாகத்​தில் இடம்​பெற்​றுள்​ளனர். மகா​போதி கோயிலை ஒரு இந்து மதத் தலம் என்று இந்​துக்​கள் அழைக்​கின்​றனர்.
இதற்கு விஷ்ணு​வின் 9 ஆவது அவதா​ர​மாக கவுதம புத்​தரை இந்​துக்​கள் கருது​வது​தான் காரணம். கடந்த 2002 ஆம் ஆண்டு மகா போதி கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்​பரிய தகுதியை வழங்​கியது. மகா போதி கோயிலை பவுத்​தர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என்ற கோரிக்கை 19 ஆம் நூற்​றாண்​டிலேயே தொடங்கி விட்​டது. இந்த இயக்​கம் இலங்கை துறவி அனகாரிக தர்​ம​பால​ரால் தொடங்​கப்​பட்​டது. அப்போது, மகா போதி கோயிலை தங்கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​திருந்த இந்து பூசா​ரி​களுக்கு எதி​ராக அவர் நீதி​மன்​றம் சென்​றார்.
இதையடுத்து 1949 ஆம் ஆண்டு பீகார் பேரவை மகா போதி கோயில் சட்​டம் 1949 அய் இயற்​றியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிய அரசின் வழி​பாட்​டுத் தலங்​கள் பாது​காப்பு சட்​டம் 1991 இன் கீழ் மகா போதி கோயிலும் வரு​கிறது. இதன் காரண​மாக கோயில் நிர்​வாகத்​தி​லும் எந்த மாற்​ற​மும் செய்ய முடியாது. இதை எதிர்த்​தும் 2 பவுத்த துறவி​கள் உச்சநீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு நிலு​வை​யில் உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *