14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பள்ளிகளிலேயே கர்ப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி

1 Min Read

சென்னை, ஏப். 2- தமிழ்நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) முக்கிய காரணமாகும். அதை கருத்தில் கொண்டு அதற்கான தடுப்பூசி திட்டம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சோதனை முயற்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

தகுதியான அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியை வழங்குவதே அத்திட்டத்தின் நோக்கம். மாநில சுகாதாரத் துறை, தேசிய சுகாதாரப் பணி மற்றும் ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதனை அரசே விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

அதை ஏற்று எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கென ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

எச்பிவி தடுப்பூசியை பெற தகுதியானவா்கள் எவா் என்பது குறித்த தரவுகள் திரட்டப்பட்டு, அவா்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளிலேயே தடுப்பூசி வழங்கலாமா அல்லது தனியாக முகாம் அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அதற்கான சாதக, பாதகங்களையும், சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்த பிறகு செயல் திட்டம் வகுக்கப்பட்டு எச்பிவி தடுப்பூசி தகுதியான அனைவருக்கும் வழங்கப்படும் என்றனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *