திருவனந்தபுரம், ஏப்.2 கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்தபடத்தின்மூலம், எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், படம் வன்முறையைத் தூண்டுகிறது என்று முதல் தகவ்லஅறிக்கையை (FIR) காட்டுமாறு மனுதாரரைக் கேட்டுக்கொண்டதுடன், படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
‘எம்புரான்’ திரைப்படம்
மலையாள நடிகர்கள் பிரித்விராஜ் – மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் `எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இதில் பிரித்விராஜ் மற்றும் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள்.முல்லை பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முல்லை பெரியாறு காட்சிகளை நீக்க தமிழ்நாடு அரசு எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்காத நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
அதே வேளையில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளுக்கு அம்மாநில அரசு மற்றும் வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, படத் தயாரிப்பாளருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, படத்தயாரிப்பாளர் அந்த காட்சிகளை நீக்கி மறு திரையீடு செய்துள்ளார். இதுகுறித்து நடிகர் மோகன்லாலும் மன்னிப்பு கோரி உள்ளார். குஜராத் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட படத்தின் பதிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி மீண்டும் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் ‘எல் 2 எம்புரான்’ படம் வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டி படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் அவர் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணை (ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது நீதிபதி “ஒரு வாரமாக ஓடும் இந்தப் படத்தால் தூண்டப்பட்ட எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்தது என்று சுட்டிக்காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அரசு தரப்பு வழக்குரைஞர் அப்படி ஏதும் வழக்குகள் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.
,இதற்கு பதில்கூறிய பாஜக வழக்கறிஞர், படத்தின் சில பகுதிகள் 2002 கோத்ரா வகுப்புவாத கலவரத்தை தேவையில்லாமல் குறிப்பிடுவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். பின்பு பாஜக நிர்வாகியிடம், இது விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என கண்டித்ததுடன், கோடை விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.