மராட்டிய பிஜேபி முதலமைச்சரின் மதவாத பேச்சு

Viduthalai
1 Min Read

நாக்பூர், ஏப்.1 மராட்டிய முதலமைச் சர் பட்னாவிஸ் நேற்று (31.3.2025) நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றவேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறுகையில் “நாம் அவுரங்கசீப்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் தான். ஆனால் அவரை யாரும் பெருமைப்படுத்தி பேசுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும் அங்கு சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகள் இடித்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.

புதிய கல்வி கொள்கையில் மத வாதத்தை புகுத்த ஒன்றிய அரசு முயற் சிப்பதாகசோனியா காந்தி குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ், “நாங்கள் கல்வியை இந்திய மயமாக்குகிறோம். இந்தியர்களை தங் களுக்கு அடிமைகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். கல்வியை இந்திய மயமாக்குவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது. தேசபக்தர்கள் அதை ஆதரிப்பார்கள். சோனியா காந்தி சரியான தகவல்களை சேகரித்து புதிய கல்வி கொள்கையின் முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *