இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனையா? இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

2 Min Read

புதுடில்லி, ஏப்.1 இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு கடன்
கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் வெளிநாட்டுக் கடன் ஒரே ஆண்டில் 10 சதவீத்துக்கு மேல் உயா்ந்துள்ளது. அதே போல், கடந்த ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் 71,270 கோடி டாலராக இருந்த வெளிநாட்டு கடன் தொகை ஒரு காலாண்டில் 0.7 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக, அரசு சாரா துறைகளின் நிலுவையில் உள்ள கடன் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் கடன் குறைந்துள்ளது.
மொத்த வெளிநாட்டு கடன்தொகையில் நிதி சாரா நிறுவனங்களின் நிலுவையில் உள்ள கடனின் பங்கு 36.5 சதவீதமாக இருக்கிறது. இதைத் தொடா்ந்து, மத்திய வங்கியைத் தவிர பிற வைப்புத்தொகை பெறும் நிதி நிறுவனங்கள் (27.8 சதவீதம்), ஒன்றிய அரசு (22.1 சதவீதம்) மற்றும் பிற நிதி நிறுவ னங்கள் (8.7 சதவீதம்) இருக்கின்றன.

கடன் பத்திரங்கள்
வெளிநாட்டு கடனில் மிகப்பெரிய அங்கமாக கடன்களின் பங்கு 33.6 சதவீதமாகவும் நாணயம் மற்றும் வைப்புத் தொகையின் பங்கு 23.1 சதவீதமாகவும் உள்ளது. வா்த்தக கடன் மற்றும் முன்பணம் (18.8 சதவீதம்), கடன் பத்திரங்கள் (16.8 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் 19.1 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில் 19 சதவீதமாக இருந்தது. செப்டம்பா்-டிசம்பா் காலாண்டில் ரூபாய் , யென், யூரோ போன்ற பிற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெ ரிக்க டாலரின் மதிப்பு உயா்ந்ததன் காரணமாக இந்த விளைவு ஏற்பட் டுள்ளது.
வெளிநாட்டு கடனில் டாலரின் பங்கு 54.8 சதவீதமாக இருக்கிறது. அதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (30.6 சதவீதம்), ஜப்பானிய யென் (6.1 சதவீதம்), எஸ்டிஆா் (4.7 சதவீதம், யூரோ (3 சதவீதம்) ஆகி யவை உள்ளன என்று கடன் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *