சதியின் பின்னணி என்ன? பிஜேபி – சிவசேனை கூட்டாட்சி நடைபெறும் மகாராட்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன

viduthalai
3 Min Read

மும்பை, ஏப்.1- மராட்டியத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் ஜியோராய் தாலுகா அர்தா மாஸ்லா கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. 29.3.2025 அன்று இரவு அர்தா மாஸ்லா கிராமத்தில் சந்தன கூடு ஊர்வலம் நடந்தது. அப்போது, இருதரப்பி னர் இடையே மோதல் ஏற் பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் மசூதியின் பின்வாசல் வழியாக 2 பேர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் யாருக்கும் தெரியாமல் மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் 30.3.2025 அன்று அதிகாலை 2 மணியளவில் மசூதியில் வைக்கப்பட்டு இருந்த ஜெலட்டின் குச்சிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மசூதி முன் திரண்டனர். அவர்கள் மசூதியில் வெடிப்பொருள் வெடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் பொது மக்கள் அதிகளவில் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மசூதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் மசூதியின் சுவர் உள்ளிட்ட பகுதிகள் லேசாக சேதமடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, மசூதிக்குள் ஜெலட் டின் குச்சிகளை வைத்ததாக ஜியோராய் தாலுகா பகுதியை சேர்ந்த விஜய் ராமா காவனே (வயது22), சிறீராம் அசோக் சாக்தே (24) ஆகிய 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைதான இருவரிடம் மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

உலகில் வாகனம் ஓட்டுவதற்கு பாதுகாப்பான நாடு நார்வே
இந்தியாவுக்கு 49ஆவது இடம்;
ஆய்வு அறிக்கையில் தகவல்

நியூயார்க், ஏப்.1- உலகில் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக நார்வே கருதப்படுகிறது. இந்தியா 49ஆவது இடத்தையும், அமெரிக்கா 51ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக உள்ளது.

ஆபத்தான நாடு

உலகில் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் ஒன்று 53 நாடுகளில், மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் தயாரித்த ஆண்டு அறிக்கை கூறுகிறது.

பல நாடுகளில் படிப்புகளைக் கொண்ட பன்னாட்டு ஓட்டுநர் கல்வி நிறுவனமான Zutobi.comஇன்படி, இந்தியா 49ஆவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது, இது வாகனம் ஓட்டுவதற்கு மூன்றாவது மிகவும் ஆபத்தான நாடாக உள்ளது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, வாகனம் ஓட்டுவதற்கு உலகின் பாதுகாப்பான நாடாக நார்வே உள்ளது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் பாதுகாப்பான மற்றும் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளை தீர்மானிக்க, மோட்டார் பாதை வேக வரம்புகள், ஓட்டுநர்களுக்கான இரத்த ஆல்கஹால் செறிவு வரம்புகள் மற்றும் சாலை போக்குவரத்து இறப்பு விகிதங்கள் உள்ளிட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் நாடுகளை பகுப்பாய்வு செய்ததாக Zutobi அறிக்கை தெரிவித்துள்ளது.

அனைத்து நாடுகளிலும் 1 லட்சம் பேருக்கு சராசரியாக சாலை போக்குவரத்து இறப்புகளின் எண்ணிக்கை 8.9இலிருந்து 6.3 ஆகக் குறைந்துள்ளது. மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *