புதுவை, ஜூலை 7- புதுவை சமூக நீதிப் பேரவையின் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் படிப்பகத்தில் 4.7.-2023 மாலை நடைபெற்றது.
அதன் நிறுவனத் தலைவர் இரா. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது இரா.விசுவநாதன் மாநிலத் தலைவர் சிவ.வீரமணியிடம் ‘விடுதலை’ சந்தா வழங்கினார்.