கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைக்க முடிவு

viduthalai
1 Min Read

பொன்னேரி, ஏப். 1- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்து ரைடல் கூட்டம் மாவட்ட தலைவர் புழல் தா.ஆனந்தன் தலைமையில் பொன்னேரி கலைஞர் அரங்கில் 30.3.2025 அன்று காலை 10 மணிக்கு நடந்தது.

மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஜெ. பாஸ்கரன் ஆகியோர் உரையாற்றிய பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் 92 வயதிலும் ஆஸ்திரேலியாவில் அயராது பணி செய்து உள்ளார். அது போல் நாமும் தொடர்ந்து இயக்க பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்,

மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் தோறும் கிளை கழகங் கள் அமைப்பது, தெரு முனை கூட்டங்கள் நடத்துவது, இயக்க ஏடுகளுக்கு எப்படி சந்தா சேர்ப்பது என்பது குறித்து விளக்கமாக பேசினார்.

தீர்மானங்கள்

ஒன்றியங்கள் தோறும் கிளை கழகங்கள் ஏற்படுத்துதல் இல்லங்கள் தோறும் கழக உறுப்பினர்களை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் சந்தித்தல்
மாவட்ட புதிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்களை ஏற்பாடு செய்தல் விடுதலை உள்ளிட்ட கழக ஏடுகளுக்கு சந்தா தாரர்களை உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பங்குபெற்றோர்

பொன்னேரி நகர தலைவர் வே.அருள், புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார், பொதுக்குழு உறுப்பினரும், சோழவரம் ஒன்றிய கழக தலைவருமான ந.கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர், சோழவரம் ப.சக்ரவர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தோழர் டார்வி, பொன்னேரி வினோத், மாவட்ட மகளிரணி தலைவர் பொன்னேரி செல்வி, பொன்னேரி நகர இளைஞ ரணி செயலாளர் எழில், பொன்னேரி ஹேமந்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *