திருச்சியில் நடைபெற்ற மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்

Viduthalai
1 Min Read

திருச்சி,ஜூலை7- திருச்சி கழக மாவட்டத்தின் சார்பில் திராவிடர் கழக மகளிரணி – திராவிட மக ளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் கடந்த 25.06.2023 அன்று  நடை பெற்றது. 

மகளிர் பாசறை செய லாளர் சங்கீதா அனைவ ரையும் வரவேற்று வர வேற்புரை ஆற்றினார். கலந்துரையாடல் கூட் டத்திற்கு  மாவட்ட மகளிரணி தலைவர் அ.அம் பிகா தலைமையேற்றார். 

இன்றைய சூழலில் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு பெண்க ளுக்கு எதிரான வன் கொடுமைகளுக்கு அடிப் படை காரணமாக அமைந் துள்ள சூழல் குறித்தும்,   நமது கழகமும், தலைவர் ஆசிரியர் அவர்களும் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக வழங்கும் அறிக் கைகள், நடத்தும் போராட் டங்கள் குறித்தும், இந்த நிலையில் அமைப்பாக இணைந்து மகளிர் பணியாற்றுவதின் அவசியத்தை குறித்தும், தொடர்ந்து நமது கழக மகளிரணி – மகளிர் பாசறையின் செயல்பாடுகள் பற்றியும் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதி வதனி சிறப்புரை வழங்கினார். 

திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய ராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்துரையா டல் கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கி முன்னிலையேற்று சிறப்பித்தனர்.

வருகை தந்த மகளிர்  தோழர்கள்  தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக திருவெறும்பூர் மகளிரணி அமைப்பாளர்  ரூபியா நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *