புதுடில்லி, மார்ச் 31- நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாகும் என்று அமித் ஷா உறுதிபடக்கூறியுள்ளாராம்.
டில்லியில் தனியார் ஆங்கில ஊடகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
அப்போது, கேள்வி-பதில் உரையாடலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
‘யுசிசி அமலாகும்’: பாஜக தொடங்கப்பட்டதில் இருந்தே அதன் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்று பொது சிவில் சட்டம். நாட்டில் இச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது.
இது, அரசியல் நிர்ணய சபையின் முடிவு என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டாலும் நாங்கள் மறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாகுமாம் அமித்ஷா சொல்லுகிறார்
Leave a Comment