பெண்கள் பெயரில் அசையா சொத்து பதிவுக் கட்டணம் குறைப்பு தமிழ்நாடு அரசு ஆணை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 31 மகளிர் உரிமைத் தொகை என்கிற பெய ரில் மாதம் ஆயிரம் ரூபாய் பெண் களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அடுத்ததாக உயர்கல்வி செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் படுகிறது

மகளிர்களுக்கான திட்டங்கள்

மேலும் பெண்கள் சொந்த தொழில் செய்து உயர்ந்திடும் வகையில் மகளிர்களுக்கு தொழில் தொடங்க மானிய உதவி, கடன் உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. திருமண உதவித்தொகை திட்டம், மகப்பேறு உதவி திட்டம், பெண் குழந்தைகள் வைப்பு தொகை திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு மகளிர்களிடம் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், தற் போது புதிய திட்டத்தை கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டது.

அதன் படி, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங் களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில்,
வரும் 01-04-2025 முதல், 10 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என கூறப் பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்திடும் வகை யில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி, அரசாணை வெளியாகியுள்ளது.

1 சதவிகிதம் தள்ளுபடி- வெளியான அரசாணை

பத்து லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான வீடு, விவசாய நிலம் மற்றும் மனை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைத்து அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதே போல மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் வகையில் 20 சதவீத மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான உத்தரவும் விரைவில் அரசாணையாக வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *