உ.பி.யில் மதவெறி அழுத்தம்!

Viduthalai
2 Min Read

மசூதியில் இடமில்லாவிட்டால் சாலையில் தொழுகை நடத்துவோம்
டில்லி ஏ.அய்.எம்.அய்.எம். தலைவர் ஷோஹிப் ஜமாய் அறிவிப்பு

புதுடில்லி, மார்ச் 29 ரம்ஜான் விழாவின்போது மசூதியில் இடமில்லையெனில் சாலையில் தொழுகை நடத்துவோம் என்று ஏஅய்எம்அய்எம் கட்சியின் டில்லி தலைவர் ஷோஹிப் ஜமாய் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான்
தற்போது ரம்ஜான் மாத நோன்பை முஸ்லிம்கள் கடைப் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 31-ஆம் தேதி ரம்ஜான் கொண் டாடப்படவுள்ளது. இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், மசூதியின் கூரைகள் அல்லது சாலைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது எனவும், அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.
மீரட் நகரிலும் இதேபோன்ற ஒரு அறிவிப்பு வெளியாகி சர்ச் சைக்குள்ளானது. மீரட் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப் பில், சாலைகளில் தொழுகை நடத்துவோர்மீது வழக்குகள் பதிவாவதுடன், அவர்களது கடவுச் சீட்டு மற்றும் வாகன உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ் டிரிய லோக் தளம் அறிக்கை வெளி யிட்டிருந்தது. இதைய டுத்து அகில இந்திய இத்த ஹாதுல் முஸ்லிமின் கட்சியின் (ஏஅய்எம்அய்எம்) டில்லி பிரிவும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சாலையில் தொழுகை
இதுகுறித்து ஏஅய்எம்அய்எம் கட்சியின் டில்லி தலைவர் டாக்டர். ஷோஹப் ஜமாய் கூறி யுள்ளதாவது: இது டில்லி. உ.பி.யின் மீரட் அல்லது சம்பல் அல்ல. மசூதியில் போதுமான இடம் இல்லை என்றால், நாங்கள் சாலையில் தொழுகை நடத்துவோம். வாய்ச்சவடால் உள்ள சில பாஜக தலைவர்கள் டில்லியில் ஈத் தொழுகை குறித்து தவறான அறிக் கைகளை வெளியிட்டு வருகின்றனர். இது சம்பல் அல்லது மீரட் அல்ல. இது டில்லி. ஆம், அனைவரின் டில்லி என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண் டும்.

ஈத் தொழுகை இங்கு நல்ல முறையில் நடத்தப்படும். மசூதியில் போதுமான இடம் இல்லை என்றால், சாலைகளில் தொழுகை நடத்தி முடிக்கப்படும். இந்த தொழுகையானது ஈத்காக்களிலும், வீடுகளின் கூரையிலும் கூட நடத்தப்படும். கவாட் பயணத்தின் போது, பிரதான சாலையை பல மணி நேரம் மூடலாம். இதைபோல், தொழுகையின் போதும், 15 நிமிடங்கள் சாலைகளை மூடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது காவல்துறையின் பொறுப்பாகும்.

டில்லி பாஜக தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அபத்த மான அறிக்கைகளை வெளியிடுவது ஒரு பழக்கமாகிவிட்டது. கடைகள் மூடப்பட வேண்டும் என்றும், சாலையில் தொழுகை நடத்தப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது. அரசிடம் சாலையில் ஏன் தொழுகை நடத்தப்படக் கூடாது? என்று நான் கேட்க விரும்புகிறேன். டில்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு ஒரு வேண்டுகோள், முஸ்லிம்களுக்கு எதிராக தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று அவர் தனது பாஜக தலைவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில், இந்த நாடு அரசமைப்பு சட்டப்படி இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *