அரூர், மார்ச் 29- அரூர் கழக மாவட்ட பகுத்த றிவாளார் கழகத் துணைத் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு, பாசறை மாவட்ட அமைப் பாளரும், மேனாள் ஒன்றிய செயலாளருமான(அரூர்) ஆட்டையனூர் சி. தேசிங்கு ராஜன் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் 26.3.2025ஆம் தேதி காலை 6 மணி அளவில் மறைவுற்றார். அவரது உடல் ஆட்டை யனூர் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டது.
மாவட்ட கழகம், பகுத் தறிவாளர் கழகம் சார்பில் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், திமுக மாநில ஆதிதிராவிடர் நல குழு துணைச் செயலாளர் சா. இராஜேந்திரன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கழக துணைத் தலைவர் பெ.அன்பழகன், ச.பூபதி ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ரே.வடிவேலன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பெ.கல்பனா, பெ.உமா, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் எம்.டி குமரேசன், கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ. பாண்டியன், செயலாளர் சிந்தை குபேந்திரன், சிந்தை பச்சையப்பன், அருண் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ராம்கி ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் மறைவுற்ற தேசிங்குராஜன் உடலுக்கு கழகக் கொடியை போர்த்தி, மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்க முழக்கமிட, கழ கத் தோழர்கள் இணைந்து வீர வணக்கம் செலுத்தினர்.
இரங்கல் கூட்டம்
அங்கு உள்ள ஊர் மைதானத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மேனாள் உயர்கல்வித்துறை அமைச் சருமான பி. பழனியப்பன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப் பாளருமான ஆ.மணி, மேனாள் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ. சுப்பிரமணி, திரா விடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமதாஸ், ஆகியோர் தேசிங்கு ராஜன் மறைவுக்கு இரங்கல் உரையாற்றினர். மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.
திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆர். வேடம்மாள், சந்திரமோகன், செங்கண்ணன், சித்தார்த் தன், நெப்போலியன், முல்லைரவி, சூரிய தனபால், விசிக மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, திமுக சரவணன் ராஜசேகரன் பொதுவுடமைக் கட்சியினர், இஸ்லாம் அமைப்பின் பிரதிநிதிகள் கொங்குநாடு மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அசோகன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். மறைவுற்ற தேசிங்கு ராஜன் அவர்களுக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டியுள்ளார், அவரது திருமணத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நடத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, எந்த நிகழ்வாக இருந்தாலும் முறுக்கு மீசை கருப்பு சட்டையுடன் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிங்குராஜனின் தந்தையார் சின்னசாமி, வாழ்க்கைத் துணைவியர் தனலட்சுமி, மகன்கள் ஜான்சிராணி, விக்டோரியாமகாராணி ஆகியோருக்கு கழகத் தோழர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.