400 ஆண்டுகளுக்கு முன் ஆடம்பரமின்றி புதைக்கப்பட்ட ஒரு மன்னனின் கல்லறையில் இன்று கலவரம் ஏன்?

Viduthalai
6 Min Read

எளிமையான கல்லறையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மாண்ட ஒரு மன்னனை வைத்து இன்று கலவரம். ஒரு திரைப்படம் அந்த திரைப்படத்தில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல். அதன் மூலம் ஹிந்து முஸ்லீம் கலவரம் உருவாகிறது. ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு வெறும் 2000 ரூபாய்க்கு சொந்த பிணை – அதுவும் உடனடியாக கிடைக்கிறது.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு அதற்காக நீதிகேட்ட இசுலாமியரின் வீடு இடிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவையும் மீறி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை மேலும் வன்முறைக்காடாக்கும் வகையில் இந்த திரைப்படத்தை நாடாளுமன்ற அவையில் திரையிட மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

யார் இந்த அவுரங்கசீப்? அவுரங்கசீப் கல்லறை: அவருடைய வாழ்க்கையைப் பற்றி கூறுவது என்ன?
அவுரங்கசீப் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 20, 1707இல் இறந்தார். அவரது மூதாதையர்களின் கல்லறைகள் தாஜ்மகால் ஹூமாயுன் தம்ப் என பிரமாண்ட கட்டட அமைப்பு – உலகம் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள்
ஆனால் அவுரங்க சீப் கல்லறை எளிமையான செங்கல் வைத்து கட்டப்பட்ட சாதாரண கல்லறைகளில் ஒன்றாகவே உள்ளது. இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் கூட இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பலருக்கு அவுரங்கசீப் கல்லறை நாக்பூரில் உள்ளது என்பதே தெரியாத ஒன்று இருப்பினும், அவுரங்கசீப்பின் கல்லறையும் அவரது மரணத்தின் சூழ்நிலைகளும் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு பல பாடங்களைக் கற்பிக்கின்றன.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பேரரசுகளில் ஒன்றை அவுரங்கசீப் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆட்சி செய்தார் – ‘முகல் என்றாலே சக்திவாய்ந்த என்று பொருள். ஆனால், டில்லியின் பேரரசர் தொலைதூர குல்தாபாத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு இருந்த சில முகலாய பேரதிகாரிகள் கூட இறந்த பிறகு பெரிய கல்லறைகளைக் கொண்டுள்ளனர்.
அவுரங்கசீப் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை தனது அரசாட்சியின் கீழ் புரட்சிகளைச் செய்யும் குழுவினரால் நெருக்கடிக்கு ஆளாகிக்கொண்டு இருந்தார். பிரபுக்கள் மெதுவாக அவரைக் கைவிட்டுக் கொண்டிருந்தனர், ராணுவ ரீதியாக, அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் மராட்டியர்களால் முற்றுகையிடப்பட்டார். தக்காணத்தில் மராட்டியர்களுக்கு எதிராக போர் நடந்துகொண்டு இருக்கும் போது உடல் நலக்குறைவினால் 90 வயதை நெருங்கும் போது மரணம் அடைந்தார். தான் மரணம் அடையும் முன்பு தனது கல்லறை அலங்காரம் மற்றும் வணங்கும் இடமாக இருக்கக் கூடாது. மிகவும் எளிய முறையில் என்னை அடக்கம் செய்யுங்கள். மேலும் அரசுத் தரப்பில் எந்த செலவும் செய்யக்கூடாது என்றும் கூறிவிட்டார்.

ஞாயிறு மலர்

“இசுலாமிய சிக்கன நடவடிக்கைகளுக்கு இணங்க, ஒரு எளிய கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது அவுரங்கசீப்பின் விருப்பமாகும். அவரது கல்லறை 14ஆம் நூற்றாண்டின் சிஷ்டி துறவியான ஷேக் ஜைனுதீனின் தர்கா (சன்னதி) வளாகத்திற்குள் உள்ளது” என்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் அலி நதீம் ரெசாவி தெரிவித்தார்.
மேலும், இந்த வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவுரங்கசீப்பின் மகன்களில் ஒருவர் அசம்ஷா. அவுரங்கசீப்பிற்குப் பிறகு சிறிது காலம் பேரரசராகப் பதவியேற்றவர். அய்தராபாத்தின் முதல் நிஜாம், முதலாம் அசாப் ஜா (1724-1748), மற்றும் அசாப் ஜாவின் மகன், இரண்டாம் நிசாம், நசீர் ஜங் (1748-1750) ஆகியோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றாசிரியர் கேத்தரின் ஆஷர், தனது முகலாய இந்தியாவின் கட்டடக்கலையில், அவுரங்கசீப்பின் கல்லறை பற்றி எழுதுகிறார், “… பேரரசரின் இறுதி விருப்பத்திற்கு இணங்க, அவரது திறந்தவெளி கல்லறை, ஒரு எளிய கல் கல்லறையால் குறிக்கப்பட்டது, இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நான்கு புறங்களிலும் பளிங்கு கற்களைக் கொண்டு சிறிய சுவர் எழுப்பி மேல் புறம் . தாவரங்கள் வளரக்கூடிய வகையில் ,அப்படியே விடப்பட்டது

பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்ட் ஜார்ஜ் கர்சன், இந்தியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவரான அவரை சிறப்பு படுத்தும் விதமாக இதைச் செய்ய உத்தரவிட்டதாக ரெசாவி கூறினார். அதாவது அவுரங்கசீப் இறந்த 200 ஆண்டுக்குப் பிறகுதான் அவரது கல்லறை கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. அதற்கு முன்பு அது ஒரு மண் மேடு மட்டுமே!
அவுரங்கசீப்பின் அடக்கம் பற்றிய விரிவான விளக்கம், வரலாற்றாசிரியர் சர் ஜாதுநாத் சர்க்கார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சகீ முஸ்தாத் கானின் மசீர்-இ-ஆலம்கிரியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “… மன்னரின் கடைசி விருப்பத்தின்படி, அவர் ஷேக் ஜைனுதீனின் கல்லறையின் முற்றத்தில் அவர் இருக்கும் போது கட்டப்பட்ட ஒரு வெட்ட வெளிப் பூங்கா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்…
அவுரங்கசீப் மதங்களில் கடுமை காட்டியிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். காரணம் அவர் தான் இறந்தால் அடக்கம் செய்யுங்கள் என்று தேர்ந்தெடுத்த இடத்தில் பல சூபி இசுலாமிய போதகர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு தர்கா வழிபாடு நடக்கிறது.
தர்கா வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் மத வழிபாட்டைக் கொண்ட சூபி துறவியின் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். “கல்லறைகளை வழிபடுவது தான் பின்பற்றும் இசுலாத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று அவுரங்கசீப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவரது கல்லறையின் இருப்பிடம் அவர் தனிப்பட்ட முறையில் துறவிகள் மீதான மதிப்பை ஒருபோதும் இழக்கவில்லை என்பதைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது கல்லறை அவரது மூத்த சகோதரி ஜஹன் ஆராவின் கல்லறையைப் போலவே உள்ளது, அவர் புதுடில்லியில் உள்ள நிஜாமுதீன் அவுலியா தர்காவின் வளாகத்தில் ஒரு எளிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், ஜஹன் ஆராவும் அவுரங்கசீப்பும் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியில் முரண்பட்டனர் – ஷாஜகானின் மகன்களுக்கு இடையே நடந்த கொலைவெறி வாரிசுப் போரில் இளவரசர் தாரா ஷிகோவின் பக்கம் அவள் இருந்தார். அவுரங்கசீப்பால் சிறையில் அடைக்கப்பட்டபோது தனது தந்தைக்கு விசுவாசமான தோழியாக இருந்தார்.
முதல் ஆறு முகலாய மன்னர்களின் (‘மாபெரும் முகலாயர்கள்’ என்று அழைக்கப்படும்) கல்லறைகளும் பேரரசின் செல்வத்தைப் பிரதிபலிக்கின்றன. ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கிர் மற்றும் ஷாஜஹான் அனைவருக்கும் அழகான, கண்கவர் கல்லறைகள் உள்ளன. அவை அவர்களின் பேரரசின் மகத்துவத்தின் வெளிப்பாடாகும்.
இந்தச் சூழல் குறித்து, வரலாற்றாசிரியர் மைக்கேல் பிராண்ட், 1993ஆம் ஆண்டு ஆய்வேட்டில் (மரபுவழி, புதுமை மற்றும் மறுமலர்ச்சி: கடந்த கால முகலாய பேரரசர்களின் கல்லறை கட்டடக்கலை பற்றிய பரிசீலனைகள்) ஒரு சுவாரஸ்யமான கருத்தை முன்வைக்கிறார்: “உண்மையில், பாபரும் அவுரங்கசீப்பும் தங்கள் சொந்த எளிய அடக்கங்களைச் செய்ய உயில் எழுதியிருந்தாலும்… ஹுமாயன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் அனைவரும் தங்கள் மகன்கள் மற்றும் வாரிசுகளால் கட்டப்பட்ட கட்டமைப்புகளில் அடக்கம் செய்யப்பட்டனர்… முகலாய கல்லறைகள் உண்மையில் இறந்த பேரரசர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டதா அல்லது உள்நாட்டுப் போரின் வெற்றி நினைவுச் சின்னங்களாக அமைக்கப்பட்டதா என்பது விவாதமாக உள்ளது.

இவ்வாறு, அவுரங்கசீப்பின் கல்லறை இரண்டு விஷயங்களை முன்வைக்கிறது: அவர் தனது அடக்கத்தின் மீதும் தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது என்றாலும், அவரது வாரிசுகள் அவரது தந்தை மற்றும் தாத்தாக்களின் வாரிசுகளுக்கு இணையாக இல்லை என்பதும் உண்மைதான். மேலும், ஒரு நினைவுச்சின்னம் மூலம் அறிவிக்க பேரரசு சிறிய பிரமாண்டத்துடன் விடப்பட்டது. பாபர் முதல் அவுரங்கசீப் வரை முகலாயப் பேரரசு ஒரு வகையில் முழு வட்டமாக மாறியது.
அவுரங்கசீப் இன்றைய ஆப்கான் எல்லைமுதல் மைசூரு வங்கத்தில் இருந்து திபெத் வரையிலான பெரிய நிலப்பரப்பை ஆண்டார். மிகவும் நீண்ட கால ஆட்சி அவருடையதுதான். இருப்பினும் தன்னுடைய இறுதிகாலத்தில் தனது மகளான இளவரசி அஸிமாவிற்கு எழுதிய கடிதத்த்தில் இவ்வாறு எழுதுகிறார்.
“நான் யார், நான் இதுவரை என்ன செய்தேன் என்பது என்னால் நடந்ததா என்று எண்ணிப் பார்க்கிறேன். நான் அரசாங்கத்தை நடத்தினேன். என்னுடைய ஆட்சியில் சிலரை மதிக்காமல் இருக்கலாம், அவர்களுக்காக.. மிகவும் மதிப்புமிக்க வாழ்க்கை, வீணாகப் போய்விட்டதோ.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *