உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் இசுலாமியர்கள் ரம்ஜான் தொழுகை நடத்துவதிலும் கெடுபிடி

1 Min Read

புதுடில்லி, மார்ச் 28 வரும் 31-ஆம் தேதி ரமலான் கொண் டாடப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் அன்றைய நாள் சிறப்பு தொழுகை நடத்த காவல்துறையினர் நிபந் தனைகளை விதித்துள்ளனர்.

தொழுகை நடத்த நிபந்தனை

இதற்காக, உ.பி.யின் சம்பல் பகுதியில் அனைத்து சமூகத்தினர் பங்கேற்ற அமைதி குழு கூட்டம் மாவட்ட ஏஎஸ்பி சிறீஷ்சந்திரா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பொது மக்களும் பங்கேற்றனர். இதுகுறித்து ஏஎஸ்பி சிறீஷ்சந்திரா கூறு கையில், “ரம்ஜான் ஈத் அன்று, சம்பல் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை.

வளாகத்துக்குள்
மட்டுமே.

மசூதிகளில் ஒலிபெருக்கி கள் பயன்படுத்தவும் அனுமதி இல்லை. ஈத்கா மற்றும் மசூதிகளின் வளாகத்துக்குள் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும், இந்த பாரம்பரிய தொழுகை வேளையின்போது மின்சாரம், தண்ணீருக்கான ஏற்பாடுகள் சீராக செய்யப்படும். இதேபோல், மக்கள் பரஸ்பர நல்லிணக்கத்துடன் ஈத் முடித்த பின் அடுத்து வரவிருக்கும் நவராத்திரியையும் அமைதியாகக் கொண்டாடு மாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மீரட்டிலும் எச்சரிக்கை

சம்பல் அருகிலுள்ள மீரட் பகுதியிலும் சாலையில் ஈத் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித் துள்ளார். மீரட்டின் பதற்றமான பகுதிகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சிசிடிவி, ட்ரோன்கள் மற்றும் உள்ளூர் உளவு துறை மூலம் தொழுகை நடத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீறினால்

பாஸ்போர்ட் பறிமுதல்

நிபந்தனைகளை மீறினால் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மீரட் காவல்துறையினர் எச்சரித் துள்ளனர்.
கரோனா பரவல் காலத்துக்கு பிறகு இது போல் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக மசூதி களில் எச்சரிக்கை தொடங் கியது. ரம்ஜான், பக்ரீத் நாள்களிலும் இந்த எச்சரிக்கை தொடர்கிறது. உ.பி.யில் கடந்த ஆண்டு ரம்ஜான் தொழுகைகளின் போது காவல்துறையினரின் உத்தரவுகளை மீறியதற்காக 200 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *