லண்டன், மார்ச் 28- உலகளவில் குற்றச் செயல்கள், பாதுகாப்பு பிரச்சினைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளை மதிப்பீடு செய்து, 2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை Numbeo வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் அன்டோரா
இதில் 84.7 மதிப்பெண் களுடன் அய்ரோப்பிய நாடான அன்டோரா(Andorra) முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, 84.5 மதிப்பெண்களுடன் அய்க்கிய அரபு அமீரகம் 2ஆவது இடத்தையும், 84.2 மதிப்பெண்களுடன் கத்தார் 3ஆவது இடத் தையும், தைவான் 4வது இடத்தையும், ஓமன் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 57.9 மதிப்பெண்களுடன் இலங்கை 59ஆவது இடத்தையும், 56.3 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் 65ஆவது இடத்தையும், 55.7 மதிப் பெண்களுடன் இந்தியா 66ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
51.7 மதிப்பெண்களுடன் பிரித்தானியா 87ஆவது இடத்திலும், 50.8 மதிப்பெண்களுடன் அமெரிக்கா 89ஆவது இடத்திலும் உள்ளது.
73.5 மதிப்பெண்களு டன் சுவிட்சர்லாந்து 23ஆவது இடத்தையும், 60.6 மதிப்பெண்களுடன் ஜெர்மனி 52ஆவது இடத்தையும், 54.3 மதிப் பெண்களுடன் கனடா 75ஆவது இடத்தையும், 52.7 மதிப்பெண்களுடன் ஆஸ்திரேலியா 23ஆவது இடத்தையும், 44.6 மதிப் பெண்களுடன் பிரான்ஸ் 110ஆவது இடத் தையும் பிடித்துள்ளது.
19.3 மதிப்பெண்களு டன் வெனிசுலா கடைசி இடத்தில் உள்ளது.