பெரியகுளம், மார்ச் 28- 26.3.2025அன்று மாலை 6 மணிக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் அருகில் தொண்டறத்தாய் அன்னை மணி யம்மையார் 106 -ஆவது பிறந்தநாள்விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72ஆவது பிறந்த நாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது.
ஒன்றிய கழக அமைப்பாளர் பால் .ஆதி தமிழன் வரவேற் புரையாற்றினார். கழக பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக் கரசன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
காப்பாளர் பொறியாளர் போடி ச.இரகுநாகநாதன், மாவட்ட கழகத் தலைவர் ம. சுருளிராசன் மாவட்ட ப.க. தலைவர் அ.மோகன், கழக பேச்சாளர் ஆண்டிப்பட்டி கண்ணன், விசிக மண்டல செயலாளர் இரா.தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள்.
கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் பெரியகுளத்தில் வாழ்ந்து மறைந்த பெரியார் பெருந் தொண்டர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் பெரியகுளத்திற்குமான தொடர்புகளையும், அதனால் பெரியகுளம் மக்கள் பெற்ற சாதனைகளையும் விளக்கியும், திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக ஒன்றிய பிஜேபி அரசு செய்துவரும் துரோகங்களையும், இனமானத்திற்கு எதிரான சூழ்ச்சியினை தகர்த்தெறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றிவரும் அரும்பணி களையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக் குமார், பொதுக்குழு உறுப்பினர், பு.பேபி சாந்தாதேவி, மாவட்ட துணைத்தலைவர் ஸ்டார் நாகராசன், பறம்பு தமிழ்ச் சங்கத் தலைவர் திருப்பதி வாசகன், எருமை நாயக்கன்பட்டி பேரூராட்சிமன்ற உறுப்பினர் இரவி, மாவட்ட. ப.க. பொறுப்பாளர் இப்ராகிம் பாட்சா, மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்க டேசன், தங்கம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள்,பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் லோ.முத்துச்சாமி நன்றி கூறினார்.