அய்தராபாத், மார்ச் 28 மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று (27.3.2025) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம்!
மக்களவை தொகுதி மறுசீர மைப்புக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று (27.3.2025) மக்களவை தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு உறுப்பினர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர்.
தீர்மானம்
நிறைவேற்றம்
நிறைவேற்றம்
அப்போது முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கா மல் மக்களவை தொகுதி மறுசீர மைப்பு குறித்து ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா பேரவை தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது. மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சிகள், மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அதன்பிறகு வெளிப்படையாக முடிவை வெளியிட்டிருக்க வேண்டும். தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மக்கள் தொகை அடிப்படை யில் மக்களவை தொகுதிகளை மறு சீரமைப்பு செய்யக்கூடாது.
மக்கள் தொகை அடிப்படையில்.
தெலங்கானா சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை 119 இல் இருந்து 153 ஆக உயர்த்த வேண்டும் என பேரவை தீர்மானிக்கிறது. இதற்குத் தேவையான அரசமைப்புச் சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் தென் மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தை தெலங்கானா சட்டப்பேரவை முழு மையாக நிராகரிக்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
இதைத் தொடர்ந்து மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா பேரவையில் ஒருமன தாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.