எக்ஸ்ரே கதிர் கண்டுபிடித்த விலெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (27.3.1845) ஜெர்மனியைச் சேர்ந்த வில்லியம் ரோண்ட்கன் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் பேராசிரியராக பணியாற்றினார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் கதிர்களைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற் பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.