முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

50 ஆண்டுகாலமானாலும் யாரும் அசைக்க முடியாது!
சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி உறுதி!

சென்னை, மார்ச் 27 – சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மான்யக் கோரிக்கை மீதான விவாதத்தில் நேற்று (26.3.2025) பதிலளித்து அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் பேசுகையில்,
பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக, அதாவது அனைவரும் ஜாதி, சமயமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தந்தை பெரியார் அவர்களின் பெயரால் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை உருவாக்கினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
முதலில் 148 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன.

அதற்குப் பிறகு வந்த அரசு அத்திட்டத்தை செயல்படுத்த வில்லை. அதற்குப் பிறகு 88 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. 148+88 என 226 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. நான் இந்தத் துறைக்கு பொறுப்பேற்ற பிறகு, இந்த ஆண்டு 8 சமத்துவபுரங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ் சுமார் 20,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த 20,000 வீடுகளும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் விளங்குகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை இன்னும் 50 ஆண்டுகாலமானாலும் யாரும் அசைக்க முடியாது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வாறு அமைச்சர் தமது பதிலுரையில் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *