சென்னை, மார்ச் 26- ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆர்பிஅய் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் நிலையில் வங்கி வேலை நாட்களில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனி வங்கி ஊழி யர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. உங்கள் பண பரிவர்த்தனைகளை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும்.
தற்போது வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படுகின்றன. இரண் டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டும் 5 நாட்கள் செயல்படும். ஆனால் இந்த விதி வரும் ஏப்ரல் முதல் மாறுகிறது.
ஏனெனில் ஒன்றிய அரசு தற்போது ஊழியர் களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் விளைவாக வங்கி ஊழி யர்களின் கனவு நனவாகும் நேரம் வந்து விட்டது.
வங்கி ஊழியர்கள் வைத்த விடுமுறை கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. எனவே இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கும்.
ஏப்ரல் மாதம் முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
மற்ற நாட்களில் வங்கி மூடப்படும். குறிப்பாக அனைத்து சனிக் கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்படும். கார்ப்பரேட் அலுவலகங்கள் போல வங்கி 5 நாள் வேலை, 2 நாள் விடுமுறை நாட்களாக இருக்கும்.