புதுடில்லி, மார்ச் 25 கல்வித்துறை முழுமையாக ஆா்.எஸ்.எஸ். வசம் சென்றால் இந்தியா என்ற நாட்டையே அழித்து விடு வார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஆர்ப்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ‘இண்டியா’ அணியில் உள்ள கட்சிகளைச் சோ்ந்த மாண வா்கள் அமைப்பினா் சார்பில் டில்லி ஜந்தா் மந்தரில் நேற்று (24.3.2025) நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
‘இண்டியா’ அணியில் உள்ள கட்சிகள் இடையே கொள்கை ரீதியாக சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் கல்விமுறை விசயத்தில் இந்த அணியில் உள்ள கட்சிகளிடம் எவ்வித வேறுபாடும் இல்லை. கல்விமுறையை மாற்றியமைக்கும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவை அழித்து விடுவார்கள்
இங்குள்ள ஓா் அமைப்பு நாட்டின் கல்வித்துறையையும், எதிர்காலத்தையும் சீா்குலைக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயா் ஆா்எஸ்எஸ். கல்வித்துறை அவா்கள் கைகளில் முழுமையாக சென்றுவிட்டால், இந்தியாவை அழித்துவிடுவார்கள். இப் போதும் கூட அவா்கள் கொஞ்சம், கொஞ்ச மாக கல்வித் துறையைக் கைப்பற்றி வருகின்றனா். அவா்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிட்டால் நம்மில் யாரும் உயரிய பதவிகளுக்கு செல்ல முடியாமல் தடுத்துவிடுவார்கள்.
இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிலை யங்கள், ஒன்றிய பல்கலைக்கழகங்களில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். இனி, மாநிலங்களில் உள்ள பல் கலைக்கழகங்களிலும் ஆா்எஸ்எஸ் பரிந்துரைக்கும் நபா்களே நியமிக்கப்படும் நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்தவாரம் நாடாளுமன் றத்தில் மகா கும்பமேளா குறித்து பிரதமா் மோடி மிகவும் பெருமிதத்துடன் பேசினார். ஆனால், நாட்டில் இளைஞா்கள் மத்தியில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயா்வு, கல்விக் கொள்கை குறித்து அவா் பேசவில்லை. நாட்டின் வளங்கள் அனைத்தையும் அதானி, அம் பானிக்கு அளிப்பதும், கல்வித் துறையை ஆா்எஸ்எஸ் வசம் கொடுப்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளது. கல்வித்துறையில் ஆா்எஸ்எஸ் ஆதிக்கம் அதிகரிப்பதைத் தடுக்க நாம் முழுமூச்சுடன் போராட வேண்டும்.
ஒரே வரலாறு, ஒரே பாரம் பரியம், ஒரே மொழி என்ற ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள் கைகளை அமல்படுத்தும் வகையில் யூஜிசி-யின் பல்கலைக் கழக, கல்லூரி பேராசிரியா்கள் நியமன வரைவு அறிக்கை அமைந்துள்ளது.
இவ்வாறு ராகுல் பேசினார்.