293 பேர் உயிர் குடித்த ஒடிசா ரயில் விபத்து மூன்று ரயில்வே ஊழியர் கைது

1 Min Read

அரசியல், இந்தியா

பலாசோர், ஜூலை 8 கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹா நாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட தில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

ரயில் விபத்து தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது. பல்வேறு கோணங் களில் ரயில்வே விசாரணை நடத்தி வரும் நிலையில்  ரயில்வே மூத்த பொறி யாளர்கள் மூன்றுபேரை சி.பி.அய். கைது செய்துள்ளது. அருண் குமார் மஹந்தா, முகம்மது அமீர் கான், பப்பு குமார் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதா ரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *