கருப்புக் கொடி ஏந்தியது எதற்காக?

1 Min Read

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து வீட்டு வாசலில் நின்றபடி தமிழ்நாடு முழுவதும் பிஜேபியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இதன் நோக்கம் என்ன?

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் அதன் மூலம் தமிழ்நாட்டு உரிமையை நாடாளுமன்றத்தில் எடுத்து உரிமை முழக்கம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கூடாது அதே நேரத்தில் பிஜேபி ஆளும் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுதலாகி இந்தியா முழுவதும் பிஜேபி கொடிகட்டி ஆள வேண்டும் அவர்கள் கொடி கட்டி ஆள்வது என்றால் ஹிந்தி திணிப்பு, சமூக நீதி ஒழிப்பு உள்ளிட்ட இந்துராஸ்டிரம் ஆளுகைக்கு கீழ் தமிழ்நாட்டு மக்கள் வஞ்சிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா இப்படி ஒரு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்?
தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலும்

ஆர்.எஸ்.எஸ். வேரூன்றிடவே கூடாது என்று அவர்களே முடிவு கட்டி விட்டார்கள் போலும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *