இதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ அரசு தாய்மொழியைக் காப்போம் – பிறர் மொழியை மதிப்போம் அனைத்து மாநில மொழிகளிலும் பெயர்ப் பலகை வைத்த முதலமைச்சர்

2 Min Read

சென்னை, மார்ச் 23 நாடாளு மன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு உள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பல மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.

தலைவர்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிகழ்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் நேற்று (22.3.2025) நடைபெற்ற கூட்டுக் குழு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்கும் வெளி மாநில தலைவர்களுக்கு அந்தந்த மாநில மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தலைவர்களின் இருக்கைகளில் அந்த அந்த மாநில மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒடிசா மொழிகளில் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. இது இந்திய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது முயற்சி ஆகும்.

ஒன்றிய அரசு மாநில முதலமைச் சர்களின் கூட்டம், இதர மாநில அமைச்சர் அதிகாரிகள் கூட்டம் போன்றவை நடத்தும் போது ஹிந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்களை வைத்திருக்கும்.

இது தொடர்பாக 2026 ஆம் ஆண்டு கேரள நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது பொது மொழி ஆங்கிலம், அரசு தொடர்பு மொழி ஹிந்தி ஆகவே இரண்டு மொழிகள் மட்டுமே போதுமானது என்று அன்றைய மனித வளத்துறை அமைச்சரகம் பதில் கூறி இருந்தது.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் ஹிந்தி மட்டுமே பயன்படுத்தப் பட்டது, அதிலும் இந்தியா என்ற பெயரை தவிர்த்து விட்டு பாரத் என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. இதற்கும் பிரதமர் அலுவலகம் விளக்கம் கூறியபோது உலக அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் விதமாக என்று கூறியிருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் நடந்த ஒன்றிய அரசு சார்பான கூட்டத்தில் முதல் முதலாக ஹிந்தியில் பெயர் எழுதி வைத்தி ருந்தார்கள். இது கடுமையான கண்டனங்களை எதிர்கொண்ட போது இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொடுக்கும் நிறுவனம் ஏற்ெகனவே வட இந்தியாவில் நடக்க இருந்த கூட்டத்திற்காக தயார்

செய்யப்பட்ட பெயர் பட்டியலை இங்கு கொண்டுவந்துவிட்டது. என்று சாக்குப்போக்கு கூறியிருந்தது.
இந்த நிலையில் நேற்று சென் னையில் நடந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அவரவர் மொழிக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரவர் மொழியில் பெயர்ப் பலகைகளை வைத்திருந்தது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *