உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியல் வெளியிட தடை உயர் நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

மதுரை, மார்ச் 22- ‘உயர் கல்வி நிறுவனங்களுக்கான என்.அய்.ஆர்.எப்., தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிடக்கூடாது’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி செல்லமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு: தேசிய நிறுவன தர வரிசை கட்டமைப்பான என்.அய்.ஆர்.எப்., வாயிலாக இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரி சையை ஒன்றிய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கற்பித்தல், மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல் அடிப்படையில் தரவரிசை அளிக்க வேண்டும். இதை சரியாக பின்பற்றாத கல்லுாரிகளுக்கு தரவரிசையில் முதலிடம் அளிக்கப்படுகிறது.

இதில், வெளிப்படை தன்மையை பின்பற்றுவதில்லை. முறைகேடு நடக்கிறது. மாணவர்கள் சரியான கல்லுாரியை தேர்வு செய்ய முடியவில்லை. 2025க்கு என்.அய்.ஆர்.எப்., தரவரிசை பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான ஒப்புதல், மதிப்பெண், வருமானவரித்துறை தணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தபின் என்.அய்.ஆர்.எப்., தரவரிசை வெளியிட உத்தரவிட வேண்டும். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.சிறீமதி அமர்வு, ‘என்.அய்.ஆர்.எப்., பட்டியலை வெளியிடக்கூடாது. ஒன்றிய கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்., 24க்கு ஒத்தி வைக்கப்படுகிறது’ என, உத்தரவிட்டது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *