ஒன்றிய பிஜேபி அரசின் ஓரவஞ்சனை சென்னை மாநகராட்சிக்கு தரவேண்டிய ரூ.350 கோடியை தரவில்லை மேயர் ஆர்.பிரியா குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 22- சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் மார்ச் 19ஆம் தேதி ரூ.8,405 கோடிக் கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விவாதம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூடத் தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமர குருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (21.3.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பெரும் பாலான கவுன்சிலர்கள் வரவேற்று பேசினர்.

பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசும் போது, சொத்து வரியை உயர்த்தியும் பற்றாக் குறை நிதிநிலை அறிக்கை போட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, “ஆண்டு தோறும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தினால் நிதி வழங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.
ஆனால் ரூ.350 கோடியை வழங்கவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும்” என்றார். இறுதியில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மருந்தகம்

கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வார்டு உறுப்பினர் களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு தொகை ரூ.10 லட்சம் ஏப்.1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மேயர் அறிவித்தார்.

மாநகராட்சிக்கு சொந்தமான 65 இடங்களில் முதலமைச்சர் மருந்தகங்களை டியுசிஎஸ் கூட்டுறவு சங்கம் மூலம் தொடங்க மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *