உக்ரைன் பிரச்சினை பற்றிக் கவலைப்படும் பிரதமரால் மணிப்பூர் பிரச்சினையை பேசி தீர்க்க முடியாதா? மக்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் ராணிகுமார் கேள்வி

viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 22- மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலைமை ஆகியவை தொடா்பாக மக்கள வையில் தென்காசி திமுக எம்.பி. டாக்டா். ராணி சிறீகுமார் தமிழில் எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈா்த்தார்.

மணிப்பூர் பிரச்சினை

மணிப்பூா் மாநிலத்துக்கான 2025-2026ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேச மக்களவையில் திமுக எம்.பி. ராணி சிறீகுமாருக்கு வாய்ப்பளிக் கப்பட்டது. இதைத் தொடா்ந்து தனது உரை முழுவதையும் அவா் தமிழில் பதிவு செய்தார். அதன் சுருக்கம் வருமாறு:

மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் வன்முறை தீ எரிந்துகொண்டே இருக்கிறது. மெய்த்தி மற்று குக்கி இன மக்களி டையே ஏற்பட்ட வன்முறை மாநிலம் முழுவதும் பரவியதால் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனா். 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் உள்நாட்டு அகதிகளாக தஞ்ச மடைந்துள்ளனா். வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள் தரைமட்டமாக் கப்பட்டுள்ளன. மக்களின் உடை மைகள் சிதைக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் பிரச்சினை

மத்திய பாதுகாப்புப் படையின் ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயிரக் கணக்கில் ஆயுதங்கள், ஆயுதப்படை வீரா்களின் கண் முன்னேயே கடத் தப்பட்டுள்ளன.

உக்ரைன் போன்ற வெளிநாடு களின் பிரச்சினையை பேசித் தீா்க்க வெளிநாடு செல்லும் பிரதமரால் தனது சொந்த மண்ணில் பற்றி எரியும் மணிப்பூருக்குச் சென்று பிரச்சினையை பேசித் தீா்க்க முடியாதா? மணிப்பூரில் வசிக்கும் மெய்த்தி சமூகத்தினருள் பெரும்பாலானோர், ஹிந்து மத த்தைச் சோ்ந்தவா்கள். அவா்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள, குக்கி மற்றும் நாகா சமூகங்களை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு, மணிப்பூரில் மேலும் பிளவுகளை உருவாக்கியுள்ளது.

மணிப்பூா் வன்முறையில் குக்கி இன சகோதரிகள் நிர்வாணமாக்கப் பட்டு, ஊா்வலமாக அழைத்து செல்லபட்டு, கூட்டுப் பாலி யல் வன்கொடுமைக்கும் உள்ளாக் கப்பட்ட காணொளி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது எந்த நாகரிகத்தின் அடையாளம்? இதுதான் இரட்டை எஞ்சின் அரசின் செயல்திறனா? ஒன்றிய கல்வி அமைச்சா் தமிழ்நாடு எம்.பி.களை மிகவும் இழிபடுத்தும் வகையில் விமரசித்தார். உலகுக்கே நாகரிகத்தை கற்றுக் கொடுதவா்கள் தமிழா்கள். இதை அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

போதைப்பொருள் கடத்தல்

வடகிழக்கு எல்லை மாநிலமான மணிப்பூரில் போதைப் பொருள்கள் மற்றும் ஆயுத கடத்தல் ஒரு பெரும் பிரச்சினையாகும். மணிப்பூரில் குக்கி சமூகத்தினா் மீதான வன் முறை என்பது ஊடுருவல், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற காரணங்களால் நியாயப் படுத்தப்படுகின்றன. அப்படியெனில் இந்தியா – மியான்மா் எல்லையில் ஊடுருவல் என்பது ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையாகும். அந்த வகையில் ஒன்றிய அரசு நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் தோல் வியடைந்துள்ளது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *