சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில், 11 இடங் களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைக்க, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான நிலையில், அவற்றுக்கான இடங்களை உடனே தேர்வு செய்யும் படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட் டுள்ளது.
இதுகுறித்து, உயர் கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி கூறிதாவது:
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் சேரும் மாணவ – மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் வாயிலாக, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத னால், உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
இதை தக்க வைக்கும் வகையில், குன்னுார், நத்தம், ஆலந்துார், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப் பேட்டை, திருவிடை மருதுார், பெரம்பலுார், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில், புதி தாக கலை மற்றும் அறி வியல் கல்லுாரிகள் அமைப்பதற்கான அறி விப்பு, பட்ஜெட் உரையில் இடம்பெற்றது. கடந்த மாதம் முதலமைச்சர் கடலுார் மாவட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தில், பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த வகையில், 11 இடங்களிலும் கட்ட டங்களை கட்டும் வகையில், நகர பகுதியில் மூன்று ஏக்கர், கிராமப் பகுதியில் அய்ந்து ஏக்கர் இடத்தை தேர்வு செய்ய, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஊர்க ளில் அடுத்த கல்வியாண் டிலேயே மாணவர் சேர்க்கையை துவக்கி, தற்காலிக வகுப்பறைகளில் பாடங்களை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கல்லுாரிகளில்
2ஆவது ‘ஷிப்ட் ‘
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பல்வேறு படிப்புகளுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதாவது, 100 இடங்கள் மட்டுமே உள்ள ஒரு படிப்புக்கு, 2,000 மாணவர்கள் கூட விண்ணப்பிக்கின்றனர். அதுபோன்ற பாடங் களுக்கு, இந்தாண்டு முதல், 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், இரண்டாம் பாடவேளை அதாவது இரண்டாவது ‘ஷிப்ட்’ முறை அறிமு கம் செய்யப்பட உள் ளது. இதற்கான கட்டமைப்பு களை உருவாக்கவும், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை கூடுத லாக்கவும், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.