போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, மார்ச் 21 தமிழ்நாடு போக்கு வரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப் பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் தமிழ்நாட்டின் சிற்றூர் தொடங்கி நகரங்கள் வரை பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் ஓட்டுநராக, நடத்துநராக பலர் பணிபுரிந்து வரும் நிலையில், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்களும், விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் மொத்தமாக காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நாளை முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை முதல் http://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *